• Apr 27 2024

விஜய்யை தூக்கி எறிந்தாரா அட்லி? கொந்தளிக்கும் ரசிகர்கள்...

ammu / 1 year ago

Advertisement

Listen News!

ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லி முதல் படத்திலேயே தனக்கான அங்கீகாரத்தை பிடித்தார். பிறகு இரண்டாவது படத்திலேயே நடிகர் விஜய்யை வைத்து தெறி திரைப்படத்தை இயக்கினார் இது மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை ஆடியது.


அதனை தொடர்ந்து மெர்சல், பிகில், என நடிகர் விஜய்யை வைத்து தொடர் மூன்று வெற்றியை கொடுத்தார் இயக்குநர் அட்லி. இதனால் தற்போது இயக்குநர் அட்லி அவர்கள் இதுவரைக்கும் தோல்வியை கண்டிடாத இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். 


தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் நடிகர் விஜய் அவர்கள் ஜவான் திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்டார் என்று தற்போது ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது அது மட்டும் இல்லாமல் அவருக்கு பதிலாக வேற ஒரு முன்னணி நடிகரை அட்லி நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


புஸ்பா 2 படத்தில் பிசியாக இருக்கும் அல்லு அர்ஜூனை ஜவான் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று ஷாருக்கான் மற்றும் அட்லி இருவரும் தனி விமானத்தில் சென்று அவருடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 


அது மட்டுமல்லாமல் விஜய் நடிக்க வேண்டிய சிறப்பு தோற்றத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பது உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 


இதனால் கொந்தளித்த விஜய் ரசிகர்கள் "வாழ்க்கை கொடுத்தவரை காலை வாரி விடுவது நியாயமே இல்லை" எதற்காக விஜய்யை தூக்கினீர்கள் என்று கேள்வி கேட்டு விளாசி வருகிறார்கள். இனியும் விஜய் சம்மதிப்பாரா? அட்லீ என்ன செய்ய போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement

Advertisement