• Oct 08 2024

நேருக்கு நேராக மாலினியை மிரட்டிய செழியன்! திடீரென பாக்கியாவுக்கு கிடைத்த க்ளூ!

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம். 

அதில், மாலினி வீட்டுக்கு போன செழியன், ஜெனி மட்டும் என்ன விட்டு போனா உன்ன சும்மா விட மாட்டேன், உன்ன உயிரோடவே விட மாட்டேன் என மிரட்டுகிறார். வெளியே வரும் போது எழில் நிற்க, ஒன்றுமே பேச முடியாமல் இருக்கிறார். ஆனாலும் எழில் ஏன் அவசப்பட்டு மாலினி வீட்டுக்கு வந்த? ஜெனிட அப்பா பார்த்தா மறுபடியும் பிரச்சினை வரும், எல்லாம் சரியாகும் பொறுமையா இரு என அட்வைஸ் பண்ணுகிறார்.

மறுபக்கம் ஜெனியின் அம்மாவை காலேஜில் சென்று பார்த்து, ஜெனியும் செழியனும் மீட் பண்ணி பேச டைம் கொடுக்குமாறும், ஒரு தடவை ஏற்பாடு செய்யுமாறும் கேட்க, அவர் முடியவே முடியாது என சொல்கிறார்.


இன்னொரு பக்கம் ஈஸ்வரி ரெஸ்டாரண்டின் வெளியே நின்று செல்வி, கஸ்டமரை கூவி கூவி அழைக்கிறார். அதற்கு பாக்கியா  காமெடி பண்ணாம உள்ள வந்து இரு என்ன சொல்கிறார்.

ஆனாலும் ரெஸ்டாரண்டுக்கு வரும் கஷ்டமர்ஸ் காரை நிறுத்தி பார்த்துவிட்டு விட்டு அப்படியே மீண்டும் செல்வதை அவதானிக்கிறார். அதன் பின்பு தான் இதில் வாகனங்களை விடுவதற்கு இடம் இல்லை என பாக்கியாவுக்கு புரிகிறது. அதனால் இனி அதற்கு என்ன பண்ணலாம் என திட்டமிடுகிறார்.

இதைத் தொடர்ந்து இனியாவின் காலேஜுக்கு சென்ற பாக்கியா  அங்கு இனியாவை பார்த்து அவரிடம் டைம் ஸ்பென்ட் பண்ணுகிறார். இதுதான் இன்றைய எபிசோட்.


Advertisement