• May 18 2024

முக்கிய நபரின் காலில் விழுந்த பிக்பாஸ் அக்ஷரா... அட விஷயம் இதுதானா..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் மொழியில் ஒளிபரப்பாகும் சேனல்களில் ஒன்று விஜய் தொலைக்காட்சி. இதில் ஓளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் யாவும் வெகு விரைவில் மக்கள் மத்தியில் பிரபல்யமாகி விடும்.

அவ்வாறான நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 5 ஆவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இதில் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். அதில் நடிகை அக்‌ஷராவும் ஒருவர். 


இந்த நிகழ்ச்சியின் மூலம் அதிகளவு ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிய ஒருவராக இவர் இருக்கின்றார். இந்நிகழ்ச்சியில் 80 நாட்கள் வரை வெற்றிகரமாக விளையாடிய அக்‌ஷரா, மக்கள் அளித்த வாக்குகளில் குறைவான வாக்குகள் கிடைத்த காரணத்தால் வெளியேற்றப்பட்டார்.


பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நாளிலிருந்து இன்றுவரை குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார் அக்‌ஷரா.


பிரபல மாடல் அழகியான இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 'காசு மேல காசு' என்கிற படத்தின் மூலம் நடிகையாகவும் அறிமுகமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து கன்னடத்தில் வெளியான 'பில் கேட்ஸ்' என்ற படத்தில் நடித்தார். 


இதையடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு சரிவர கிடைக்காததால் விஜய் டீவியில் ஒளிபரப்பான 'வில்லா டூ வில்லேஜ்' என்கிற ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து சிறப்பித்திருந்தார். இதன் பின்னர் 'பிக்பாஸ்' வாய்ப்பு கிடைத்ததை அடுத்து, அதிலும் போட்டியாளராக கலந்துகொண்டார்.


இவ்வாறாக பல ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்ட அக்ஷரா சமீபகாலமாகவே சமூக வலைத்தளங்களில் அதிகளவில் ஆக்டிவாக இருந்து வருகின்றார். அதில் அடிக்கடி தன்னுடைய குடும்ப புகைப்படங்களை வெளியிட்டு வருவார். 


அந்தவகையில் நேற்றைய தினம் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு தனது அம்மா, மற்றும் அண்ணனுடன் இணைந்து புகைப்படங்களை எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றார்.


அதில் இவர் தனது அண்ணனின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி இருக்கின்றார். அப்புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement