• May 18 2024

சும்மா கேள்வி கேட்டு தொலைக்காத-ஹேமாவைத் திட்டிய பாரதி- கண்ணம்மா எடுக்கப் போகும் அதிரடி முடிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. ஒவ்வொரு உண்மைகள் மெல்ல மெல்லமாகத் தெரிய ஆரம்பித்ததால் சீரியலும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இந்த சீரியலில் இன்று என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

வீட்டில் சௌந்தர்யா அகிலன் மற்றும் சௌந்தர்யாவின் கணவர் வேணு என மூவரும் அமர்ந்து ஃபங்ஷனில் நடந்த பிரச்சனை குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அகிலன் வெண்பா பற்றி கண்ணம்மா சொன்ன விஷயத்தை பேச சௌந்தர்யா இந்த விஷயத்தை கண்ணம்மா அன்னைக்கே சொல்லி இருந்தா அந்த வெண்பாவை கொன்னு இருப்பேன். இப்ப அவளை சும்மா விட போறதில்லை என கூறுகிறார்.

இந்த பக்கம் வெண்பா கண்ணம்மா கொலை செய்யும் முயற்சி செய்த விஷயத்தை சொன்னதால் சௌந்தர்யா கண்டிப்பாக எதையாவது செய்வார். அவங்க லேசு பட்ட ஆள் இல்லை என சாந்தியிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். பிறகு மறுநாள் பாரதி ஹேமாவிற்கு தலை வாரிவிட சௌந்தர்யா நான் பண்றேன்னு என கிட்ட போக பாரதி வேண்டாம் என தடுத்து விடுகிறார்.

பிறகு ஹேமாவை சாப்பிட வைத்து ஸ்கூலுக்கு கூட்டி செல்லும்போது பாரதியின் நடவடிக்கையால் தாத்தா பாட்டி கிட்ட சண்டை போட்டிங்களா என ஹேமா கேட்க அப்படியே வச்சுக்கோ என பாரதி கூறுகிறார். ஏன் எதுக்கு என கேள்வி கேட்டு தொலைக்காத அமைதியாக வா என பாரதி சொல்லி கூட்டிட்டு இருக்கிறார்.

இந்தப் பக்கம் லட்சுமி கண்ணம்மாவை பேரன்ஸ் மீட்டிங்குக்கு அழைக்க கண்ணம்மா பர்மிஷன் போட முடியாது நான் மிஸ் கிட்ட போனில் பேசிக் கொள்கிறேன் என கூறுகிறார். பிறகு லட்சுமியை சமாதானம் செய்து ஸ்கூலுக்கு ரெடியாக சொல்லி விட்டு கண்டிப்பா இனி ஹேமாவ பார்த்து பேச பாரதி அனுமதிக்க மாட்டார் எப்படி அவளை பார்ப்பேன் எப்படி அவகிட்ட பேசுவேன் என கண்ணம்மா குழம்பி போக பிறகு அப்படியே ஏதாவது பண்ணட்டும் இந்த கண்ணம்மா யாருன்னு காட்டுறேன். எது பண்ணாலும் நஷ்டம் அவருக்குத்தான் என கண்ணம்மா மனதுக்குள் சொல்லிக் கொடுக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement