• May 12 2024

பொம்பளைங்க எந்த தப்புமே செய்யாம அழுதுகிட்டே ரோட்ல நிக்கணுமா- பாரதி கண்ணம்மா சீரியலை வம்புக்கு இழுத்த பாக்கியலட்சுமி சீரியல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்பின் உச்சத்தில் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.தனது கணவனின் கள்ளத்தனத்தை எல்லாம் அறிந்த பாக்கியா தற்பொழுது கோபியை விவாகரத்தும் செய்து விட்டார். இதனால் குடும்பத்துக்குள் பிரிவும் ஏற்பட்டு விட்டது.

இதனால் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர். மேலும் பாக்கியாவை வீட்டை விட்டு போகுமாறு கோபி சொல்கின்றார். ஆனால் பாக்கியா நான் எதுக்கு போகனும் நீங்க தான் போகனும் என்று கோபியை விரட்டி விடுகின்றார்.


"ஆம்பளைங்க தப்பு செய்வீங்க, ஆனா பொம்பளைங்க எந்த தப்புமே செய்யாம அழுதுகிட்டே ரோட்ல நிக்கணுமா" என பாக்யா கேள்வி கேட்கிறார்.

பாரதி கண்ணம்மா தொடரில் ஹீரோ சந்தேக புத்தியால் வீட்டை விட்டு வெளியில் வந்த கண்ணம்மா தெருத்தெருவாக நடந்து சென்றது பற்றி தான் பாக்கியலட்சுமியில் குறிப்பிட்டு இருக்கிறார்கள் போல என ட்ரோல் செய்து வருகின்றனர்.

இதனால் ஒரே சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு இடையிலேயே மோதலா எனக் கேட்டு வருவதோடு கோபி வீட்டை விட்டு செல்வாரா அடுத்து என்ன நடக்கும் என ஆவலாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement