• May 18 2024

எழிலால் திடீரென நெஞ்சுவலியால் துடித்த பாக்கியா- கோபத்துடன் பழனிச்சாமி வீட்டுக்குச் சென்ற கோபி- ராதிகா கேட்ட கேள்வி

stella / 11 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

கோபி ராதிகாவிடம் பாக்கியாவுக்கு கல்யாணம் என்று சொல்லிக் கொண்டிருக்க ராதிகா திட்டுகின்றார். அப்படியெல்லாம் கல்யாணம் பண்ணிக்கிற ஆளு அவங்க கிடையாது. அப்படியே அவங்க கல்யாணம் பண்ணிங்கிட்டாலும் உங்களுக்கு என்ன இப்பவும் அவங்க மேல அன்பு இருக்கா என்று கேட்க கோபி பேச்சை மாற்றி விட்டு துாங்குகின்றார்.


அப்போது கனவில் பாக்கியா பழனிச்சாமிக்கு காபி கொண்டு போய் கொடுக்க பழனிச்சாமி பாக்கியாவைப் பொண்ணு பார்ப்பது போல ரசிக்க கோபி திட்டுக்கிட்டு எழும்பிப் பார்க்கிறார். அத்தோடு கனவில கூட அந்த பனை மரம் தான் வாரான் என்று பழனியைத் திட்டி விட்டு குடிக்க தண்ணீர் எடுப்பதற்காக கீழே வருகின்றார்.

தண்ணீர் எடுக்க வரும் போது பாக்கிய துாங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து உனக்கு ஏன் இப்படி எல்லாம் யேசனை வருது நல்லாத் தானே இருந்த என பாக்கியா முன்னாடி நின்று திட்ட பாக்கியா எழும்பி விட தண்ணீர் எடுக்க வந்ததாக சொல்ல பாக்கியா திட்டி அனுப்ப  கோபி தண்ணீர் எடுத்துக் கெண்டு மேலே செல்கின்றார். அங்கு ராதிகா கேள்விக்கு மேல கேள்வி கேட்க சமாளித்து விட்டு துாங்குகின்றார்.

பின்னர் விடிந்ததும் எழில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது எழில் அமிர்தாவிடம் காபி கேட்டதால் பாக்கியா நெஞ்சு வலி வந்தது போல நடிக்கிறார். இவ்வளவு காலமும் எங்கிட்ட காபி கேட்டிட்டு இருந்த இப்போ கல்யாணம் வந்ததும் பொண்டாட்டிக் கிட்ட கேட்கிறிஙா என்று நக்கலடிக்க அமிர்தா உங்களைப் பற்றி தெரியும் நீங்க எல்லாம் இப்படி சொல்லுற ஆளே கிடையாது என ஜாலியாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.


அப்போது எழில் பழனிச்சாமி தனக்கு சினிமாவில் ஒரு வாய்ப்பு வாங்கித் தருவதாக சொன்ன விஷயத்தை சொல்லி அவரைப் பார்க்கப் போவதாக கிளம்புகின்றார். தொடர்ந்து கோபி பழனி வீட்டுக்குச் சென்று என் மனைவி கூட நீங்க எப்படிப் பேசலாம் என்று சொல்ல பழனி நான் தான் உங்க மனைவியைப் பார்த்தது கிடையாது என்று சொல்ல, பாக்கியாவைத் தான் சொல்லுறேன் என கோபி சொல்ல அவங்க தான் உங்க வைஃப் கிடையாது அவங்க என்னோட பிரண்ட் என்று சொல்ல கோபி எதுக்கு பொண்ணு பார்க்க வீட்டை வாரீங்க என்று கேட்க பொண்ணு இருக்கிற இடத்திற்கு தானே வர முடியும் என்று சொல்ல கோபி அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இன்றைய எப்பிசோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement