• May 12 2024

பாலாஜி பொண்ணு கூட பேசமாட்டார் ஆனால் என்னை கெட்ட வார்த்தையால் திட்டுவார்- தாடி பாலாஜி மனைவி நித்யா பேட்டி!

stella / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரை, வெள்ளித்திரையில் நடித்த பிரபல்யமானவர் தான் தாடி பாலாஜி.இவர் விஜய் கமல் என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருக்கின்றார்.இது தவிர பிக்பாஸ் சீசன் 2 இலும் பங்கு கொண்டு பிரபல்யமானார். குடும்ப பிரச்சனைக் காரணமாக அவரது மனைவி நித்யாவை பிரிந்து வாழ்ந்து வருகின்றார்.

தாடி பாலாஜியின் மனைவி நித்யா சென்னையை அடுத்த மாதவரத்தில் தனது மகளுடன் தனியாக வசித்து வருகிறார். நித்யாவுக்கும் எதிர்வீட்டு காரருக்கும் அவ்வப்போது சண்டை ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த மாதம், நித்யா தங்களது காரை தாக்கியதாக சிசிடிவி ஆதாரத்துடன் மாதவாரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து நித்யாவை விடுவித்தனர்.


இதையடுத்து, ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த தாடி பாலாஜியின் மனைவி நித்யா, இது ஒரு சின்ன பிரச்சனை தான், இதற்கு தேவையில்லாமல் காவல் நிலையம் வரை சென்றுவிட்டனர். எதிர்வீட்டுக்காரர் ஆதாரமாக கொடுத்த சிசிடிவியில் நான் கல்லை எடுத்து கார் கண்ணாடி யை உடைந்தது போல எந்த காட்சியும் இல்லை. இது வேண்டும் என்று போடப்பட்ட வழக்கு என்றார்.

அந்த வீடு என் அப்பா எனக்காக கொடுத்தது, அந்த வீட்டில் நானும் பாலாஜியும் இருந்த போது, அங்கு இருக்கும் பலரிடம் பாலாஜி பேசுவார் இப்போதும், அங்கு இருப்பவர்களிடம் என்னைப்பற்றி விசாரித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் எதிர்வீட்டுக்காரரிடம் பாலாஜிக்கு நல்ல பழக்கம் உண்டு. இதனால் இந்த காரை கண்ணாடி உடைப்பு வழக்கின் பின்னணியில் கூட அவர் இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தது என்றார்.


மேலும், தாடி பாலாஜி மீது நான் போட்ட வழக்கில் அவர் செய்த தவறு உறுதியானதால், மகிளா நீதிமன்றம் 50லட்சம் தரவேண்டும் என்றும், மாதா மாதம் மகளுக்கு 50 ஆயிரம் தரவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால், பாலாஜி இதுவரைக்கும் மகளுக்காக எந்த பணத்தையும் தரவில்லை. பாலாஜி தவறு செய்தார் என்பதை நிரூபிக்கத்தான் போராடினே தவிர பணத்திற்காக இல்லை.


மேலும், பாலாஜி மகளுடன் பேசலாம், வெளியில் அழைத்துப் போகலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், மகளுக்கு என்று தனி செல்போன் கொடுத்து இருக்கிறேன். ஆனால், பாலாஜி ஒரு முறைக்கூட மகளுடன் பேசியது இல்லை, வெளியில் அழைத்துச் சென்றதும் இல்லை. இப்போதும் கூட என்னை மோசமாக திட்டி திட்டி மெசேஜ் அனுப்புவதால், நான் அவருடைய நம்பரை பிளாக் செய்துவிட்டேன் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement