• May 08 2024

ஜெயிலர் படத்திற்காக கார் கொடுத்தது பற்றி ஓபனாகப் பேசிய அனிரூத்- லியோ படத்தின் அடுத்த அப்டேட் எப்போது தெரியுமா?

stella / 8 months ago

Advertisement

Listen News!

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் இன்றைய தினம் பான் இந்தியத் திரைப்படமாக வெளியாகியிருந்த திரைப்படம் தான் ஜவான். படத்திற்கு சிறப்பான விமர்சனங்கள் கிடைத்துவரும் சூழலில் படத்தின் வசூலும் 1000 கோடி ரூபாய்களை தாண்டும் என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில் இந்தப் படத்தின் வசூல் மற்றும் வரவேற்பு நடிகர் ஷாருக்கானை உற்சாகம் கொள்ள செய்துள்ளது.இந்தப் படத்திற்கு சக நடிகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜும் தனது பாராட்டைத் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் படத்தினை பார்த்து விட்டு படத்தின் இசையமைப்பாளரான அனிரூத் பத்திரிகையாளர்களுடன் பேசி இருக்கின்றார். அதில் அவர் பேசியதாவது முதன் முறையாக பெரிய ஒரு ஸ்டாரின் படத்தில் வேர்க் பண்ணி ஹிந்தி சினிமாவில் காலடி எடுத்து வைத்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கின்றது என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து ஜெயிலர் படத்திற்காக கார் தந்த விஷயம் குறித்து கேட்கப்பட்டது. அதாவது ரஜினிகாந்த், நெல்சன் எல்லோருக்கும் கலாநிதி மாறன் சேர் கார் வழங்கின போது அனிரூத்துக்கு ஒன்றும் வழங்கவில்லையா என்று ரசிகர்கள் கேட்டு வந்தனர். விக்ரம் படத்திற்கு கூட எதுவும் தரல என்று எல்லாம் ரசிகர்கள் கூறியிருந்தாங்க. இப்போது கார் தந்ததன் பிறகு எப்பிடி பீல் பண்ணுறிங்க என்று கேட்கப்பட்டது.


அதற்கு பதில் கூறிய அனிரூத் விக்ரம் படமே என்னு பெரிய கிப்டு தான் அதே மாதிரி தான் ஜெயிலரும். ஆனாலும் கலாநிதி மாறன் சேர் கார் தந்தது ரொம்ப சந்தோஷமாக இருந்திச்சு. முதன் முறையாக ஒரு படத்தின் இயக்குநருக்கு இப்பிடிக் கொடுத்திருக்கிறாங்க. அந்த காரை நான் ரொம்ப பத்திரமாக வைத்திருப்பேன் என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய இவர் லியோ படத்தின் செக்கன்ட் சிங்கிள் இன்னும் ஒரு வாரத்தில் ரிலீஸாகும் என்றும் அடுத்த மாதம் லியோ மாதமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement

Advertisement