• Apr 02 2025

திருமணத்திற்கு பின் மொத்தமாக மாறிய அமலாபால்.. ஈஷா யோகா மையத்தில் உருக்கமான பிரார்த்தனை..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை அமலாபால் நேற்று சிவராத்திரி தினத்தில் கோவை ஈஷா யோகா மையத்தில் தனது கணவருடன் மனமுருகி பிரார்த்தனை செய்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை அமலாபால் திருமணத்திற்கு முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முழுக்க முழுக்க கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்த நிலையில் திருமணத்திற்கு பிறகு அவர் மொத்தமாக மாறி விட்டதாக தெரிகிறது.

குறிப்பாக முழுக்க முழுக்க ஆன்மீகப் பாதையில் அவர் சென்று விட்டார் என்றும் ஈஷா யோகா மையத்திற்கு அவர் அடிக்கடி சென்று வருவதாகவும் கூறப்பட்டது. சமீபத்தில் கூட அவர் ஈஷா யோகா மையத்தில் தனது கணவருடன் சென்று சிவபெருமானை வழிபட்ட புகைப்படங்களை பதிவு செய்திருந்தார் என்பதும் அவை மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது கர்ப்பமாக இருக்கும் அமலாபால் அவ்வப்போது யோகா, தியானம் செய்ய புகைப்படங்களை வெளியிட்ட நிலையில் நேற்று சிவராத்திரி தினத்தில் ஈஷா யோகா மையத்திற்கு தனது கணவருடன் சென்றுள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் மனமுருகி சிவனை பிரார்த்தனை செய்வது, யோகா செய்வது உள்ளிட்ட காட்சிகள் இருக்கும் நிலையில் திருமணத்திற்கு பின்னர் அமலா பால் மொத்தமாக மாறிவிட்டார் என்றும் இனி அவரது வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும் என்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



Advertisement

Advertisement