மனிதன் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படங்களில் ஒன்று தான் 'தீ இவன்'. சினிமாவில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இப்படத்தின் வாயிலாக காலடி எடுத்து வைத்திருக்கின்றார் நவரச நாயகன் கார்த்திக்.
மேலும் இவருடன் இணைந்து சுகன்யா, ராதா ரவி, சுமன், ஸ்ரீதர், ஹேமந்த் மேனன், அபிதா, அஸ்மிதா, யுவராணி, தீபிகா, சிங்கம் புலி, ஜான் விஜய், சரவண சக்தி, இளவரசு, சுப்புராஜ், விஜய் கணேஷ் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள்.
மேலும் இப்படத்திற்கு T. M. ஜெயமுருகன் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்கள் எழுதி இசையமைத்து சிறப்பாக இயக்கியுள்ளார். அத்தோடு Y. N. முரளி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
மொகமத் இத்ரிஸ் என்பவர் படத்தொகுப்பு செய்கிறார். அதுமட்டுமல்லாது A. J. அலி மிர்ஸா என்பவர் பின்னணி இசை பணிகளை மேற்கொள்ள உள்ளார். பிரமாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தை நிர்மலாதேவி ஜெயமுருகன் தயாரித்துள்ளார்.
இப்படமானது நம் தமிழ் சமுதாயம் கலை மற்றும் கலாச்சாரம், சமூக உறவுகளை கொண்டு கட்டமைக்கப்பட்டிருப்பினும் இன்றைய காலக்கட்டத்தில் அவைகள் கட்டுப்பாடுகளை இழந்து வருகிறமையால், இளம் தலைமுறைக்கு நம் உறவையும் கலாச்சாரத்தையும் கொண்டு செல்லும் விதமாக இந்தப் படம் உருவாக்கப்படுகிறது.
அத்தோடு இந்தபடத்தில் இடம் பெற உள்ள " மேலே ஆகாயம் கீழே பாதாளம் நடுவில் ஆனந்தம் " என்ற பாடலுக்கு நடிகை சன்னி லியோனை நடனமாட வைக்க வேண்டும் என்று வெகு நாட்கள் ரசிகர்கள் பலரும் காத்திருந்தார்கள். அவர்களின் அந்த ஆசை தற்போது நிஜமாகியுள்ளது.
அதாவது நேற்று முன்தினம் மும்பை சென்று நடிகை சன்னி லியோனை நேரில் சந்தித்து படம் பற்றி கதையை கூறி இருக்கின்றனர் படக்குழுவினர். கதை மற்றும் நடிகர்களை கேட்டவுடன் அந்த பாடலுக்கு நடனமாட ஒப்புக்கொண்டிருக்கின்றார். அத்தோடு பாடல் வரிகள் மிகவும் சிறப்பாக உள்ளதாகவும் கூறியிருக்கின்றார்.
அந்தவகையில் இந்த பாடலின் படப்பிடிப்பு நவம்பர் 15 ஆம் தேதி சென்னையில் மிக பிரம்மாண்டமாக செட் அமைத்து நடைபெற உள்ளதாகவும் கூறியுள்ளனர் படக்குழுவினர். சன்னிலியோனுடன் இணைந்து கார்த்திக் ஆட உள்ள இந்த பாடலிற்கு ரசிகர்கள் மத்தியில் இப்போதிருந்தே எதிர்பார்ப்புக்கள் கிளம்பத் தொடங்கி விட்டன.
Listen News!