• Apr 27 2024

தமது கெரியருக்காக காதல் கணவரைத் தூக்கி எறிந்த பிரபலங்கள்- எல்லாம் பணம் தான் காரணமா?

stella / 9 months ago

Advertisement

Listen News!

சினிமா பிரபலங்களின் திருமண வாழ்க்கை என்பது நிரந்தரமில்லாதது என்பது தான் ரசிகர்களின் கருத்தாக இருக்கின்றது. இதற்கு காரணம் பிரபலங்கள் தங்களுடைய திருமண வாழ்க்கையை பாதியிலேயே முறித்துக் கொள்வது தான் காரணம்.ஒரு சில பிரபலங்கள் அதிகமாக பணம் இருப்பதால் சொந்த வாழ்க்கையைப் பற்றி யோசிக்காமல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு தங்கள் நினைத்தது போல் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வாழவும் செய்கிறார்கள்.

அவ்வாறு வாழ்க்கையை அமைத்துக் கொண்ட நடிகைகள் பற்றியே தற்பொழுது பார்க்கப் போகின்றோம்.

அமலாபால்: நடிகை அமலாபால் பல எதிர்ப்புகளை தாண்டி இருவீட்டாரின் சம்மதத்தோடு இயக்குநர் ஏ.எல். விஜயை காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்திற்கு பின் இவர் நடித்த வேலை இல்லா பட்டதாரி திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்ததை நம்பி, சினிமாவில் தனது பெரிய எதிர்காலம் இருப்பதாகவும், பணம் மட்டுமே இருந்தால் போதும் எனவும் நினைத்து கிடைத்த அழகான வாழ்க்கையை தூக்கி எறிந்து விட்டு தற்போது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார்.


ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள்கள் இருவருக்குமே முதல் திருமணம் விவாகரத்தில் தான் முடிந்திருக்கிறது. இதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் விருப்பப்பட்டு காதல் திருமணம் செய்து கொண்ட நடிகர் தனுஷை கிட்டத்தட்ட 12 வருடங்கள் கழித்து விவாகரத்து செய்திருக்கிறார். தற்போது ஒரு இயக்குநராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார்.


சுகன்யா: 90களின் காலகட்டத்தில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர்தான் நடிகை சுகன்யா. இவர் அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து அங்கேயே குடியேறினார். திருமணம் ஆகி ஒரு வருடத்திற்குள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர். 


தொகுப்பாளினி டிடி: சின்னத்திரை தொலைக்காட்சிகளில் நம்பர் ஒன் தொகுப்பாளினியாக இருந்தவர் டிடி என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷினி. கேரளாவை சேர்ந்த தன்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட இவர், ஒரு வருடத்திற்குள் திருமண உறவை முறித்துக் கொண்டார். மீண்டும் சின்ன திரையில் ஒரு வலம் வரலாம் என்று நினைத்த இவருக்கு ஆர்த்தரடீஸ் நோய் ஏற்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.


மகாலட்சுமி: ஒரு தொகுப்பாளராக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கிய மகாலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருக்கும் நிலையில், அவரை விவாகரத்து செய்துவிட்டு தன்னுடன் சீரியலில் நடித்த ஈஸ்வர் உடன் காதலில் இருந்ததாக செய்திகள் வெளியாகின. பின்பு யாரும் எதிர்பார்க்காத நிலையில் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்திருக்கிறார்.


Advertisement

Advertisement

Advertisement