• Apr 27 2024

நடிப்பிலிருந்து விலகி புதிய முயற்சியில் களமிறங்கிய நடிகை ஷாமிலி- திறப்பு விழாவில் பங்குபற்றிய ஏ.ஆர்.ரகுமான் மற்றும் மணிரத்னம்

stella / 10 months ago

Advertisement

Listen News!


 தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளி் குழந்தை நட்சத்திரமதாக அறிமுகமாகியவர் தான் ஷாம்லி.குழந்தையாக இருக்கும் போது, ரசிகர்களை தன்னுடைய துரு துரு நடிப்பால் கவர்ந்த ஷாம்லியால் ஏனோகதாநாயகியாக நடிக்கும் போது கவரமுடியாமல் போனது. 


தமிழ் மற்றும் தெலுங்கில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களுக்கு ஜோடியாக இவர் நடித்த அடுத்தடுத்த படங்கள் தோல்வியடைந்ததால், பட வாய்ப்புகள் கிடைக்காமல் ஒரு நிலையில் திரையுலகில் இருந்தே முழுமையாக விலகினார்.


ஷாம்லியின் ஆர்வத்தை கண்டறிந்து அவரை ஊக்கப்படுத்தி வந்தார் அக்கா கணவர் அஜித். அவரின் வழிகாட்டுதல் படி, ஓவியம் மற்றும் நாட்டிய கலைகளை ஆர்வத்துடன் கற்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது.


குறிப்பாக ஓவிய துறையில் மேதையான ஏ. வி. இளங்கோவின் வழிகாட்டலுடன் ஓவியம் வரைவதில் கவனம் செலுத்தினார். இந்தத் துறையில் இடைவிடாத பயிற்சி, விடாமுயற்சியோடு பல ஓவிய படைப்புகளை உருவாக்கினார் ஷாம்லி.


ஷாம்லியின் ஓவியங்களின் தனி சிறப்பு என்றால், அவர் தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ற வகையில் வண்ணமயமாகவும். ‌ பெண்களின் சுதந்திரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் இருந்தது.


இவரது படைப்புகள் ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு பெங்களூரூவிலுள்ள சித்ரகலா பரிஷத் எனும் கலைக்கூடத்தில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டில் சென்னையிலுள்ள வெண்பா கேலரி எனும் கலைக்கூடங்களில் இடம்பெற்றது.


அதே போல் சமீபத்தில் துபாயில் உள்ள வேர்ல்ட் ஆர்ட் துபாய் எனும் சர்வதேச ஓவிய கலைக் கூடத்திலும் கண்காட்சியாக தன்னுடைய ஓவியங்களை பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தி இருந்தார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஓவியர்கள் கலந்து கொண்டு, தங்களின் படைப்புக்களை காட்சி படுத்தியது குறிப்பிடத்தக்கது.


இதை தொடர்ந்து தன்னுடைய ஓவிய படைப்புகளை அனைவரும் பார்வையிடும் விதமாகவும், விற்பனை செய்யும் விதமாகவும் 'ஷீ' என்கிற ஆர்ட் கேலரி ஒன்றை துவங்கியுள்ளார். இதில் ஷாலினி, அவரின் மகன் ஆத்விக், மகள் அனோஷ்கா உள்ளிட்ட அனைவருமே கலந்து கொண்டனர்.


மேலும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், இயக்குநர் மணிரத்னம், சுஹாசினி மணிரத்னம், ஆக்ஷன் கிங் அர்ஜுன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு, ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.



Advertisement

Advertisement

Advertisement