• Apr 27 2024

அடுத்தடுத்து நிகழ்ந்த மரணம்... துவண்டு போன நடிகை கனகா.. சோகமான சம்பவத்தை பகிர்ந்த பிரபலம்..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

'கரகாட்டக்காரன்' படத்தின் மூலமாக ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தவர் நடிகை கனகா. இவர் குறிப்பாக 90 களில் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகையாக இருந்தவர். தமிழில் மட்டுமல்லாது மேலும் பல மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் தனது திரையுலக வாழ்க்கையில் மொத்தம் 40 திரைப்படங்களில் நடித்தவர்.

இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு, கனகா வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவகள் குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார் அதாவது "இயக்குநர் கங்கை அமரன் கரகாட்டக்காரன் படத்திற்கு கதாநாயகியை தேடிக்கொண்டு இருந்த போதுதான் நடிகை தேவிகாவின் மகள் கனகா அவர் கண்ணில் படுகிறார்.


அந்த சமயத்தில் கனகாவுக்கு வெறும் 16 வயதுதான் என்பதால், சினிமாவில் நடிக்கவைக்க விருப்பம் இல்லை என்கிறார். ஆனால், கங்கை அமரன், நடிகை தேவிகாவிடம் பேசி எப்படியோ சம்மதத்தை வாங்கி கரகாட்டக்காரன் படத்தை கனகாவை வைத்து எடுக்கிறார்.

ஆனால் சுமாராக ஓடும் என்று பலரும் நினைத்த கரகாட்டக்காரன் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததால் கனகாவின் மார்க்கெட் சினிமாவின் உச்சத்திற்கு சென்றது. தெலுங்கு, மலையாளம், பாலிவுட் என பல படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. பின்னர் அதிசயபிறவி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்கிறார். அந்த படமும் வெற்றி பெறுகிறது.


இவ்வாறாக அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்து டாப் நடிகையாக இருந்த கனகா தனது அம்மாவின் மரணத்திற்கு பிறகு மிகுந்த மனஅழுத்தத்திற்கு உள்ளாகி எங்கும் செல்லாது வீட்டிலேயே முடங்கிவிட்டார். அம்மாவாக, அப்பாவாக, பாதுகாவலனாக இருந்த தேவிகாவின் மரணத்தை கனகாவால் கொஞ்சமும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை" என்றார் செய்யாறு பாலு.

மேலும் "அந்த சமயத்தில் தான், தனக்கு திருமணமாகிவிட்டது என்றும், தனது கணவர் பெயர் புருஷோத்தமன் அவர் நியூயார்க்கில் இருக்கிறார் என்றும் கனகா ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்திருந்தார். பின்னர் பத்திரிக்கையாளர்கள் கணவரின் புகைப்படத்தை கேட்டபோது இவர் தரவில்லை. இதனால் பல பத்திரிக்கைகளில் கனகா பொய் சொல்கிறார் என்றும், அவருக்கு திருமணம் ஆகவில்லை என்று பலவாறாக அடிக்கடி செய்திகள் வெளியாகின. 


இந்தளவிற்கு கனகா எதற்காக தனக்கு திருமணமாகிவிட்டது என்று பொய் சொன்னார் என்று யாருக்குமே இதுவரை தெரியவில்லை. இந்த காலகட்டத்தில் தான் தேவிகாவால் சினிமாவாய்ப்பை பெற்ற பிரபல நடிகர் ஒருவரின் மகன் ராமச்சந்திரன் கனகாவுக்கு பிஏவாக இருந்து அவரை நன்றாக கவனித்துக்கொள்கிறார். அந்தவகையில் அவர் கனகாவுடன் படப்பிடிப்புக்கு செல்வது, கதை கேட்பது, சம்பளம் வாங்குவது என அனைத்திலும் கனகாவுக்கு துணையாக இருந்து, அவரை மன அழுத்தத்தில் இந்து மீட்டுவந்தார். 

இந்நிலையில் ராமச்சந்திரனுக்கு கனகாவை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்தது, இதனையடுத்து அவர் கனகாவை ஒரு தலையாக காதலித்து வந்தார். ஆனால், ராமச்சந்திரனை தவறாக புரிந்து கொண்ட கனகா அவரை வீட்டை விட்டு வெளியில் அனுப்பிவிடுகிறார். அதன் பிறகு சில வருடத்தில் ராமச்சந்திரன் இறந்த பிறகுதான், நடிகை கனகாவுக்கு அவர் தன்னை ஒரு தலையாக காதலித்ததே தெரிகிறது. 

இதன் காரணமாக மீண்டும் மனம் உடைந்துப்போன கனகா, சினிமாவும் வேண்டாம், எதுவும் வேண்டாம் என்று தன்னைத்தானே வீட்டில் சிறைவைத்துக்கொண்டு தனிமையில் வாழ்ந்து வருகிறார். இதுதான் கனகாவின் சோகமான வாழ்க்கை" என்று செய்யாறு பாலு மிகவும் மன வருத்தத்துடன் அந்தப் பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement