• May 17 2024

துணை நடிகரிடம் விஜயகாந்தின் உடல் நலம் குறித்து விசாரித்த நடிகர் அஜித்- நெகிழ்ந்து பேசிய பிரபலம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் தற்பொழுது ஐரோப்பாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். வெகு விரைவில் நாடு திரும்பவுள்ள இவர் இந்தியாவிற் வந்ததும் தனது ஏ.கே 61 படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் இணையவுள்ளார். இப்படத்தின் முதற்கட்டப்படப்பிடிப்பானது ஐரோப்பாவில் நடைபெற்றது. இரண்டாம் கட்டப்படப்பிடிப்பானது புனேயில் நடைபெற உள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் அஜித் பொது நிகழ்வுகள் எதிலும் கலந்து கொள்வதில்லை. ஆனால் திரைப்படம் சார்ந்த சங்கங்களுக்கோ இல்லை பணியாளர்களுக்கோ ஏதாவது பிரச்சனை வந்துவிட்டால் உடனே குரல் கொடுக்கக் கூடியவர். பண உதவியும் செய்யக் கூடியவர்.

அப்படி திரை மறைவில் அவர் செய்த சில செயல்களை நடிகர் மீசை ராஜேந்திரன் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறியதாவது உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் திரைப்படம் எடுத்துக் கொண்டிருந்த சமயத்தில் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் ஃபெஃப்சி சங்கத்திற்கும் பிரச்சன எழுந்தது. அதில் தொழிலாளர்களுக்கு ஆதரவா குரல் கொடுத்தார் அஜித். அதனால் அவருக்கு படங்கள் கொடுக்கக் கூடாது என்று கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது என இயக்குநர் விக்ரமன் ஒரு முறை கூறியிருந்தார்.

தன்னுடைய பட நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்ளாதவர், ஒரு முறை நடன இயக்குநர்கள் சங்கம் நடத்திய விழாவில், அவர்கள் மேல் வைத்திருந்த மரியாதைக்காக கலந்து கொண்டார். தமிழகத்திற்கு தண்ணீர் தராத கர்நாடக மாநிலத்திற்கு மின்சாரம் தரக் கூடாது என்று விஜயகாந்த தலைமையிலான நடிகர் சங்கம் நெய்வேலியில் போராட்டம் செய்தபோது, முன்னணி நடிகர்கள் சிலர் கலந்து கொள்ளாமல் தவிர்த்தபோது கூட அஜித் அதில் கலந்து கொண்டார். அந்தப் போராட்டத்திற்கு அஜித் நல்ல ஒத்துழைப்பு கொடுத்ததாக விஜயகாந்த் அவர்களும் ஒரு முறை கூறியிருக்கிறார்.

"என்னை அறிந்தால்" ஷூட்டிங் நடந்த நேரத்தில் வேறு ஒரு ஷூட்டிங்கிற்காக அதே ஸ்பாட்டில் இருந்திருக்கிறார் மீசை ராஜேந்திரன். அப்போது அஜித்திடம் பேசலாமா, பேசினால் திரும்ப பேசுவாரா என்ற குழப்பத்துடன் சரி பேசித்தான் பார்ப்போமே என்று அவரிடம் சென்று என்னை தெரிகிறதா சார் என்று கேட்டாராம். அதற்கு,"என்ன சார் அட்டகாசம் படத்துல நடிச்சிருக்கோம், எப்படி உங்கள மறப்பேன்" என்று அஜித் கூறினாராம்.

பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு காட்சியில் நடித்ததை ஞாபகம் வைத்து பேசுகிறாரே என்று மனதிற்குள் மகிழ்ச்சி அடைந்தாராம் ராஜேந்திரன். அப்போது, விஜயகாந்த் அவர்களின் உடல் நலம் குறித்து தன்னிடம் விசாரித்ததாகவும், நான் சாப்பிடப் போகிறேன், நீங்களும் சாப்பிட வருகிறீர்களா என்று தனக்கு மரியாதை கொடுத்ததாகவும் நெகிழ்ந்து பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement