• May 08 2024

வெற்றியையும் சுடரையும் ஒன்றாகப் பார்த்த அபியின் அப்பா- இனி நடக்கப் போவது என்ன?- வெளிச்சத்திற்கு வருமா உண்மைகள்?

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் விறுவிறுப்பான திருப்பங்களுடன் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தென்றல் வந்த என்னைத் தொடும். இந்த சீரியலில் வெற்றி சுடர் தன்னுடைய குழந்தை தான் என்பது தெரியாமல் பழகி வருகின்றார். 

இப்படியான நிலையில் வெற்றி சுடருடன் கோயிலுக்கு வந்த விடயத்தை அபியின் அப்பா சங்கரநாராயணன் பார்த்து விடுகின்றார். இதனால் சங்கரநாராயணன் அபிக்கிட்ட போய் சுடரை கோயிலில் பார்த்த விடயத்தை சொல்லிவிடுவாரோ என பயந்து விஜி அவரிடம் போய் கேட்கின்றார்.


ஆனால் சங்கரநாராயணன் இது தான் அபியோட புருஷன் வெற்றி என்றும் சுடர் வெற்றியின் குழந்தை தான்என்றும் சொல்லி விடுகின்றார். இதனைக் கேட்ட விஜி அதிர்ச்சியடைந்து நிற்கின்றார். அத்தோடு இந்த விஷயத்தை வெற்றி கிட்ட சொல்லி விடுவோமா என்றும் கேட்கிறார்.


ஆனால் இதனை விஜி தடுத்து விடுவாரா அல்லது வெற்றியிடம் சென்று உண்மையைச் சொல்லி விடுவாரா என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இது குறித்த ப்ரோமோ தான் வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement