• Jul 02 2024

10ஆண்டுகள் கழிந்தும் நேற்றுப்போல் இருக்கிறது... திருமண நாளில் பாடகி சைந்தவி பகிர்ந்த பதிவு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி இருவரும் ஒரே பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். பள்ளிக் காலத்திலேயே இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். 


இவர்களின் சிறந்த குடும்ப வாழ்க்கைக்கு உதாரணமாக 2020-ஆம் ஆண்டு இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்தது. தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமில்லாமல் திரை வாழ்க்கையிலும் இவர்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றி வருகிறார்கள். 


இந்நிலையில் ஜிவி-சைந்தவி தம்பதியினர் இன்று தமது பத்தாவது ஆண்டு திருமண நாளை கொண்டாடுகிறார்கள். இதனையடுத்து தனது வாழ்க்கைத் துணைக்கு சைந்தவி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதியுள்ள வாழ்த்துப்பதிவு அனைவரது மனதையும் கவர்ந்துள்ளது.


அதாவது இப்பதிவில் "நமக்கு திருமணமாகி  10 ஆண்டுகள் கழிந்துவிட்டன ஆனால் திரும்பிப் பார்க்கையில் நேற்று போல் இருக்கிறது. என் வாழ்க்கைத் துணைக்கு 10-வது ஆண்டு திருமண நாள் வாழ்த்துக்கள். ஒரு நல்ல நண்பனாக , ஒரு பாசத்துக்குரிய கணவனாக, நமது மகளுக்கு ஒரு சிறந்த தந்தையாக இருப்பதற்காக நன்றி. ஒரு சிறந்த நபராக இருப்பதற்கு நன்றி. 10 ஆண்டுகளை  நாம் சேர்ந்து கடந்ததைப்போல் காலமெல்லாம் பயணிக்க வேண்டும்" எனக்குறிப்பிட்டு மிகவும் அழகான வரிகளால் தனது கணவனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் சைந்தவி.

Advertisement

Advertisement