• May 17 2024

யுகேந்திரன் இதுக்காகத் தான் பிக்பாஸிற்கே போயிருக்காரு,நான் இழுத்துப் பூட்டிட்டேன்- ஓபனாகப் பேசிய அவரது மனைவி

stella / 7 months ago

Advertisement

Listen News!

முதல் நாளிலிருந்தே பிக்பாஸ் 7 சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. அதன்படி இரண்டு வீடுகள் இருக்கும் நிலையில் கேப்டனை கவர தவறிய பவா செல்லதுரை, நிக்ஸன், ரவீனா, வினுஷா, அனன்யா, ஐஷு உள்ளிட்ட ஆறு பேர் ஸ்மால் பாஸ் வீடு என்று அழைக்கப்படும் சின்ன வீட்டுக்கு சென்றனர். 

அவர்கள் அந்த வீட்டிலிருந்து வெளியே வரக்கூடாது; பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் சொல்வதைத்தான் சமைக்க வேண்டும் போன்ற ரூல்ஸ்கள் போடப்பட்டிருக்கின்றன.


அதுமட்டுமின்றி பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்களையும், ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களையும் நாமினேஷன் செய்ய வேண்டும் என்று ட்விஸ்ட் வைக்கப்பட்டது.

அதன்படி 7 பேர் நாமினேஷன் ஆகியுள்ளனர்.இது ஒரு புறம் இருக்க நடிகர் யுகேந்திரனும் போட்டியாளராகக் கலந்து கொண்டுள்ளார்.இந்த நிலையில் இவரது மனைவியான மாலினி பிரபல சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, யுகேந்திரனை மலேசியா வாசுதேவனின் மகன் என்று எல்லோருக்கும் தெரியும் ஆனால் நடிகராகவும் பாடகராகவும் சில பேருக்கே தெரியும்.

அவர் தனக்கென ஒரு அடையாளத்தை கிரியேட் பண்ணனும் என்று தான் இந்த ஷோவுக்கு போயிருக்கின்றார்.அவருக்கு குடும்பம் என்றால் ரொம்ப பிடிக்கும்.குடும்பத்தை பற்றி யோசிக்காத வரை சரியாக விளையாடுவாரு,குடும்பத்தை பற்றி யோசிக்க ஆரம்பிச்சால் தான் வீட்டுக்கு போகனும் என்று நினைப்பாரு.


அவர் இல்லாததால் கிச்சனை இழுத்துப் பூட்டிட்டேன். அவருக்கு தான் வித்தியாசமான உணவுகள் வேண்டும். ஆனால் பசங்க எது என்றாலும் சாப்பிடுவாங்க. கிச்சன் கொஞ்ச நாள் பூட்டி இருக்கும் என்பது சந்தோசம் தான். இவர் பிக்பாஸ் வீட்டிறகு போவதை பற்றி வெங்கட் பிரபு மற்றும்  பாடகர் சரண் கிட்ட சொன்னாரு, அவங்க முதலில் நோ சொல்லுற மாதிரி தான் இருந்தாங்க. அப்பிறம் பார்த்து இருந்திட்டு வா என்று அனுப்பி வைச்சாங்க. வீட்டில் நிறைய இளம் தலைமுறையின் இருப்பதால் யுகேந்திரனும் சீக்கிரமாக வீட்டை விட்டு வெளியேறுவதற்கு வாய்ப்பு இருக்கு என்றும் அவர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement