தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் அனன்யா நாகல்லா.இவர் தெலுங்கில் பவன் கல்யாணுடன் இணைந்து வக்கீல் சாப் என்ற படத்தில் நடித்து பிரபலமானவராக மாறினார்.
இதனைத் தொடர்ந்து சமந்தாவின் சகுந்தலம் படத்தில் நடித்திருந்தார்.தெலுங்கு மட்டுமின்றி சசிகுமார் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவிலும் தனது என்ட்ரியை கொடுக்கவுள்ளார்.இந்த படத்தின் ஷூட்டிங் தற்சமயம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.
எனக்கு எங்கே எப்போது திருமணம்? - ஆர்வத்துடன் கேள்வி எழுப்பிய பிரபல நடிகை
இதனை கவனித்த இவர் , எனக்காக ஒரு மாப்பிள்ளையை பார்த்ததற்கு நன்றி , அப்படியே கல்யாணம் எங்கு எப்போது என்று சொன்னால் என்னுடைய திருமணத்தில் நானும் கலந்துகொள்வேன் எனக் கூறி வதந்திக்கு முடிவு கட்டியுள்ளார்.இந்தப் பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Listen News!