• Apr 10 2025

"வாடிவாசல்" படத்தை விட்டு தெலுங்குப் படத்திற்குச் சென்ற சூர்யா! என்ன நடந்திருக்கும்?

subiththira / 4 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் வெற்றிமாறன் மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகவுள்ள ‘வாடிவாசல்’ திரைப்படம் குறித்து பல்வேறு தகவல்கள் தற்பொழுது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இந்தப் படம் தொடர்பாக ஏற்கனவே ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றார்கள். அந்தவகையில் தற்பொழுது வெளியான தகவலின் படி வாடிவாசல் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது அனைத்து ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

சூர்யாவின் இந்தப் படம் ‘வாடிவாசல்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இப்படத்தை ‘அசுரன்’, ‘வடசென்னை’, ‘விசாரணை’ போன்ற படங்களை இயக்கிய வெற்றிமாறன் இயக்குகிறார்.


இந்த படம் பற்றிய அறிவிப்பு பல ஆண்டுகளாக வெளிவந்திருந்தமையால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால், இப்படத்தின் பணிகள் நீடித்துக்கொண்டு இருப்பதால் இதுவரை படப்பிடிப்பு தொடங்கவில்லை. மேலும், வெற்றிமாறன் தற்போது பல திட்டங்களை மேற்கொண்டிருப்பது இப்படத்திற்கான முக்கிய தடையாக உள்ளது எனக் கூறப்படுகிறது.

வாடிவாசல் படம் தொடங்கும் முன் பல தடைகள் ஏற்பட்டதால் சூர்யா தற்போது தெலுங்கு படத்திற்காக ஒப்பந்தமாகியுள்ளார். அதன் படப்பிடிப்பு முடிந்த பிறகு தான் அவர் வாடிவாசல் படத்தில் நடிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சூர்யா மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் வாடிவாசல் திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய இலக்காக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனினும், படம் தொடர்பான உறுதியான அறிவிப்பு வரும்வரை ரசிகர்கள் அதனை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement