சமூக உறவுகள், பயணத்தின் அழகு மற்றும் மனித மனதின் உணர்வுகளை பசுமையாக சித்தரித்திருக்கும் இயக்குநர் இரா. ராம் இயக்கிய புதிய திரைப்படம் “பறந்து போ”, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. திரையரங்குகளில் வெற்றிகரமான ஓப்பனிங்கைப் பெற்றதையொட்டி, படக்குழுவினர் இன்று ஒரு சிறப்பான வெற்றி விழாவை ஏற்பாடு செய்து கேக் வெட்டி மகிழ்ந்தனர்.
பறந்து போ” திரைப்படம், உலக அளவில் பெரும் பாராட்டைப் பெற்றது. அதன் பின், 4 ஜூலை 2025 அன்று உலகளாவிய ரிலீஸாக திரையரங்குகளில் வெளியானது.பட வெளியீட்டிற்கு பிறகு வந்த பாராட்டு விமர்சனங்கள் மற்றும் மிகச்சிறந்த திரையரங்கு வசூல் ஆகியவற்றைக் கொண்டாடும் வகையில், படக்குழுவினர் இன்று சென்னையில் உள்ள ஓர் தனியார் இடத்தில் சிறப்பு விழாவை ஏற்பாடு செய்தனர்.இயக்குநர் ராம் , மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி , தயாரிப்பு குழுவினர் , இசையமைப்பாளர்கள், ஊடக நிருபர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.
“பறந்து போ” திரைப்படம் சாதாரணமான கதையல்ல. இது வாழ்க்கையின் போராட்டங்களை, பயணத்தில் ஏற்படும் மன அழுத்தங்களை, உறவுகளின் நெருக்கங்களை உணர்ச்சிபூர்வமாகச் சொல்லும் ஒரு படைப்பு. அதன் வெற்றி, தமிழ் சினிமாவின் வளர்ச்சியை சுட்டிக்காட்டும் ஒரு முக்கியமான அடையாளமாகும்.
படக்குழுவின் வெற்றி விழா, ரசிகர்களிடம் அவர்கள் பெற்ற அன்புக்கும், படத்தின் மீது அவர்களுக்குள்ள நம்பிக்கைக்கும் நன்றி கூறும் ஒரு சின்னமான நிகழ்வாக அமைந்துள்ளது. மேலும் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தமது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர் .
Listen News!