• May 09 2024

’கோட்’ ஆபீஸில் சிவகார்த்திகேயன் பட டிஸ்கஸ் செய்த வெங்கட் பிரபு.. கோபத்தின் உச்சத்தில் விஜய்

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்து வரும்கோட்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபுகோட்பட அலுவலகத்தில் தான் இயக்க இருக்கும் அடுத்த திரைப்படமான சிவகார்த்திகேயன் படத்தின் டிஸ்கஸ் செய்ததை அறிந்த விஜய், கோபத்தின் உச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் நடித்து வரும்கோட்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் அடுத்ததாக இயக்க இருக்கும் சிவகார்த்திகேயன் படத்தின் திரைக்கதை அமைக்கும் பணியில் அவ்வப்போது வெங்கட் பிரபு செய்து வருவதாகவும்கோட்படத்தின் அலுவலகத்தில் உதவி இயக்குனகளுடன் இந்த படம் குறித்து டிஸ்கஸ் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

கோட்படத்தின் அலுவலகத்தில் அந்தப் படத்தை பற்றி டிஸ்கஸ் செய்யாமல் அடுத்த படத்தின் டிஸ்க்ஸ் செய்வதை அறிந்த விஜய், வெங்கட் பிரபு மீது கோபத்தின் உச்சியில் இருப்பதாகவும் நேரிலேயே தனது அதிருப்தியை வெங்கட் பிரபுவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதேபோல் தயாரிப்பு தரப்பிலும் வெங்கட் பிரபுவை கண்டித்ததாகவும் தங்களுடைய அலுவலகத்தில் அடுத்த படத்தின் டிஸ்கஸ் செய்யக்கூடாது என்று கூறியதாகவும் செய்திகள் கசிந்து உள்ளது.



சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் கமிட் ஆகியுள்ள வெங்கட் பிரபுவுக்குகோட்படத்தை விட அதிக சம்பளம் கிடைப்பதாகவும் அதனால்தான் அவர் அந்த படத்தின் மீது கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்வதாகவும் கூறப்படுகிறது.

மார்ச் மாதத்துடன்கோட்படத்தின் படப்பிடிப்பு முடிவதால் சிவகார்த்திகேயன் படத்தின் பணிகளை உடனே அவர் தொடங்க திட்டமிட்டு இருப்பதாகவும் அனேகமாக மே அல்லது ஜூன் மாதம் சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பை அவர் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement