• Apr 27 2024

கமலுடன் இதுவரை நடிக்காததற்குக் காரணம் இதுதான்... நதியா ஓபன் டாக்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

1980இல் இளைஞர்களின் மனதில் கொடி கட்டி பறந்த நடிகை நதியா தற்போதும் இளமையாகவே காணப்படுகின்றார். மேலும் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் வலம் வந்த இவருக்கு 1984-ஆம் ஆண்டும் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது.


அதன் பின்பு தமிழில் 'பூவே பூச்சூடவா' என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த இவர் அதனைத் தொடர்ந்தும் பல படங்களில் நடித்து வந்தார். 'அன்புள்ள அப்பா' படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருது பெற்ற இவர், 1988-ஆம் ஆண்டு ஷிரிஷ் காட்போல் என்பவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாடுகளில் தனது வாழ்க்கையை பயணித்தார்.


இவ்வாறாக 80, 90 காலகட்டத்தில் டாப் நாயகியாக வலம் வந்த இவர் 2004-ஆம் ஆண்டு முதல் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். நதியாவின் கண்ணியமான தோற்றம், துடிப்பான நடிப்பு, நவநாகரிக உடைகள், ஹேர் ஸ்டைல் என அனைத்தும் ரசிகர்களை அதிகளவில் கவர்ந்தன.


இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற ஒரு பேட்டியில் இதுவரை கமல்ஹாசனுடன் நடிக்காதது ஏன் என்பது குறித்து ஓப்பனாக பேசியுள்ளார் நதியா. அதில் அவர், கமல்ஹாசனுடன் நான் நடிக்காமல் போனது எனக்கு இன்றுவரை வருத்தமாகத்தான் உள்ளது.

அதற்கு ஒரே ஒரு காரணம் தான், கால்ஷீட் பிரச்சனை தான். அதாவது அவர் பட வாய்ப்பு வரும்போது வேறொரு படங்களில் நான் கமிட்டாகி இருப்பேன். விக்ரம் படத்தில் கூட முதலில் நான் தான் நடிப்பதாக இருந்தது எனவும் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement