• May 19 2024

பிரபல தமிழ் நடிகை தூக்கிட்டுத் தற்கொலை... காரணம் இதுவா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சினிமா உலகைப் பொறுத்தவரையில் திருமணக் கொண்டாட்டங்கள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் என எந்தளவிற்கு நன்மைக் காரியங்கள் பிரபலங்களிற்கு மத்தியில் இடம்பெற்று வருகின்றனவோ, அந்தளவிற்கு விபத்துக்கள், தற்கொலைகள் போன்றனவும் அதிகரித்த வண்ணம் தான் இருக்கின்றான்.

அதிலும் குறிப்பாக ஒரு சில நடிகர், நடிகைகளைப் பொறுத்தவரையில் அவர்கள் மறைந்தாலும் மக்கள் மனங்களில் எப்போதும் நிலைத்திருப்பார்கள். அதே சமயம் ஒரு சில நடிகர், நடிகைகள் மக்கள் மத்தியில் பிரபலமாகா விட்டாலும் அவர்கள் குறித்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி விடும்.

சமீபகாலமாக சினிமாத் திரையுலகிலே எதிர்பாராத விதமாக பிரபலங்களின் இறப்புக்கள் அதிகரித்த வண்ணம் தான் இருக்கின்றன. அந்தவரிசையில் தற்போது 29 வயதான நடிகை தீபா என்கிற பவுலின் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கின்றார்.


அதாவது சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவென்யூவிலே இவர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டிருக்கின்றார். இந்த சம்பவமானது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. நடிகை தீபா பவுலின் விஷாலின் 'துப்பறிவாளன், வாய்தா' உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


இவரின் இறப்புக் குறித்த விசாரணைகளை மேற்கொண்ட போலீஸார் தீபா பவுலின் காதல் தோல்வியினாலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறியுள்ளனர். இவரின் இறப்பிற்கு திரைப்பிரபலங்கள், மற்றும் ரசிகர்கள் எனப் பலரும் தமது இரங்கலினைத் தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement