• May 17 2024

உடம்பை காட்டினாதான் வாய்ப்பு கொடுக்கிறாங்க...வேதனையில் பிரபல நடிகை..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாத்துறையில் உடம்பை காட்டினால்தான் வாய்ப்பு கொடுக்கிறார்கள் என மனம் நொந்து பேசியுள்ளார்  நடிகை நிதி அகர்வால்.

இந்தியில் 2017 ஆம் ஆண்டு வெளியான முன்னா மைக்கேல் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை நிதி அகர்வால். இதனைத் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்த நிதி அகர்வால், ஈஸ்வரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.



ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி படத்திலும் நடித்தார் நடிகை நிதி அகர்வால், தற்போது கலக தலைவன் படத்தில் நடித்து வருகிறார் நிதி அகர்வால். எனினும் இதனையடுத்து அடுத்து மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



ஈஸ்வரன் படத்தில் நடித்த போது நடிகர் சிம்புவுடன் காதல் மலர்ந்ததாகவும் இருவரும் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியானது. இவ்வாறுஇருக்கையில் நடிகை நிதி அகர்வால், சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது குறித்து பேசியுள்ளார்.


மேலும் அதில் சினிமா துறையில் திறமையை பார்த்து வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்பதை தான் நம்ப மாட்டேன் என்று  தெரிவித்துள்ள நிதி அகர்வால், அழகைதான் பார்க்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் உடலைக் காட்டினால்தான் வாய்ப்பு கிடைக்கிறது என்று கூறியுள்ள நிதி அகர்வால், திறமைக்கு மதிப்பு இல்லை என்றும் 20 சதவீதம் பேர் மட்டுமே திறமையை பார்க்கிறார்கள் என்று மனம் நொந்து பேசி உள்ளார்.


Advertisement

Advertisement