• May 19 2024

இருண்ட வானின் நடுவே மின்னும் நட்சத்திரமா இவங்க...? ப்ளாக் உடையில் இப்படி பளிச்சிடுறாங்களே..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகை பிரியங்கா மோகன். இவர் தெலுங்கில் நடிகர் நானி நடிப்பில் கடந்த 2019 இல் வெளியான 'கேங் லீடர்' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். 


அறிமுகப் படத்திலேயே பிரியங்கா மோகனின் நடிப்பை பார்த்து வியந்து போன இயக்குநர் நெல்சன் தன்னுடைய இரண்டாவது படமான 'டாக்டர்' என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்க வைத்தார். இப்படத்தில் இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதன் வாயிலாக கோலிவுட் சினிமாவிலும் காலடி எடுத்து வைத்தார் பிரியங்கா.


மேலும் இப்படமானது பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு மட்டுமல்லாமல், வசூலிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரியளவில் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து சூர்யாவுக்கு ஜோடியாக 'எதற்கும் துணிந்தவன்' என்ற படத்தில் நடித்திருந்தார். இவ்வாறாக அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. 


இதன் காரணமாக அடுத்த தடவையாகவும் 'டான்' படத்துக்காக சிவகார்த்திகேயனுடன் மீண்டும் ஜோடி சேர்ந்தார் பிரியங்கா. இதனைத் தொடர்ந்து தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் ஜெயம்ரவியின் 30 ஆவது படத்திலும் அவருக்கு ஜோடியாக பிரியங்காவே நடித்து வருகிறார்.


இவ்வாறாக படங்களில் பிஸியாக இருக்கும் பிரியங்கா சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அந்தவகையில் தற்போதும் ப்ளாக் அன்ட் கோல்ட் நிற சாறி அணிந்து இவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement