விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்புடன் நகரும் சீரியல் தான் பாக்கிலட்சுமி.இது ஒரு பக்கம் இருக்க இந்த சீரியலில் ஒரு கணவன் தனது மனைவியை எப்படியெல்லாம் ஏமாற்றலாம் என்று காட்டுகின்றது.
இதற்கு பல ரசிகர்கள் இருந்தாலும் சில ரசிகர்கள் திட்டித்தீர்த்து வருகிறார்கள்.அதேசமயம் ஒரு பெண் அடிமையாக எல்லோருக்கும் சேவை செய்துகொண்டு ஏமாளியாக இருக்க கூடாது அப்படி இருந்தால் இதுதான் நிலைமை என்று உலகில் உள்ள பெண்களுக்கு ஒரு உதாரணமான கதையாகவும் அமைகின்றது.
மேலும் இத் தொடர் பாதியில் இருந்து மக்கள் ஒரே ஒரு விஷயத்தை தான் எதிர்ப்பார்த்தார்கள், அதாவது கோபியின் உண்மை முகம் ராதிகா மற்றும் பாக்கியா குடும்பத்திற்கு எப்போது தெரியவரும் என இருந்தார்கள்.ஒருவழியாக ராதிகாவிற்கு தெரியவர இப்போது குடும்பத்திற்கும் தெரிய வந்துள்ளது.செம வைரலாகி வருகிறது.
நேற்றைய எபிசோடு மருத்துவமனையில் பாக்யாவும் ராதிகாவும் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடினர். பாக்கியாவுக்கு எப்போது உண்மை தெரியும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்துக் கொண்டிருந்த நிலையில் அந்த சம்பவம் விரைவில் நடக்கவுள்ளது.
இது குறித்து வெளியாகி உள்ள ப்ரோமோ வீடியோவில் மனைவி வாங்க என சொல்ல ராதிகா எழுந்து வருகிறார். இதைக் கண்டு அதிர்ச்சியாக பாக்கியா. பிறகு கோபி ராதிகாவின் கையை பிடித்து என்னை விட்டுப் போய்டாத, நீ இல்லனா நான் செத்து விடுவேன் என சொல்ல இதைக் கேட்டு பாக்கியா என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது குறித்து எபிசோடுகள் இந்த வாரம் ஒளிபரப்பாக உள்ளது.
கோபியாவது சந்தோஷமாக இருக்கட்டும் என பாக்யா அவரை விட்டுக் கொடுப்பார் என்று சொல்லப்படுகிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
பிற செய்திகள்
- தலையில் முடி இல்லாததற்கு இதுதான் காரணம்.. வெளிப்படையாக சொன்ன சூப்பர் ஸ்டார் ரஜினி
- விஜய் பட ஹீரோயினுடன் இணையும் நடிகர் சூர்யா..வெளியானது சூப்பர் தகவல்..!
- “என்னை சிறையில் வைத்த அடித்து உதைத்தனர்”- பிரபல நடிகை
- சூர்யா படத்தில் இணையும் முன்னணி மலையாள நடிகர்! அட இவரா..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!