• Apr 27 2024

மக்களை மகிழ்விக்கும் சினிமா தொழில் எளிதான காரியம் அல்ல - கடந்து வந்த கடினமான பாதையை பகிர்ந்து கொண்ட நடிகர்.

Thiviya / 1 year ago

Advertisement

Listen News!

சித்தார்த் மல்ஹோத்ரா பாலிவுட்டின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவர். ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் ஆலியா பட் மற்றும் வருண் தவான் ஆகியோரும் நடித்துள்ளனர்.


ஆனால் நடிப்பதற்கு முன்,இவர் ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அத்துடன் இவர் தனது  சினிமா கேரியரில் நீண்ட தூரம் பயணித்துள்ளார்.தனது கனவுப் பயணத்தை சினிமாவில் தொடர்வதற்காக மாடலிங்கை இடையில் கை  விட்டுவிட்டார். 


இருப்பினும், இன்று சினிமாவில் பத்து வருடங்களை பூர்த்தி செய்த இவர் தனது போராட்டகரமான பயணத்தை பற்றிய அனுபவங்களை நேர்காணல் ஒன்றில் பின்வருமாறு பகிர்ந்துள்ளார். 


" நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே மும்பையில் தான். நடுத்தர குடும்பத்தில் நான் பிறந்தேன். சினிமாவில் நடிப்பேன் என்று நான் நினைச்சு கூட பாக்கல. என்ர குடும்பத்தார் கூட என்னல்ல  நம்பிக்கை வைக்கல. இருந்தாலும் நான் டீன் ஏஜ் ஆனபிறகு மாடலிங் வாழ்க்கைகுள்ள நுழைஞ்சேன்.

அதற்குப் பிறகு   கேமராக்களுக்கு முன்னால் நடிக்க வேண்டிய ஒரு தேவை இருந்துச்சு .அதன் பிறகு நான் சினிமா வாய்ப்புகளை பெற்றுக் கொண்டு சினிமாவில் நடிக்க துவங்கியதிலிருந்து மக்கள் என்னை வெவ்வேறு கோணங்களில் பார்க்க ஆரம்பித்தார்கள் .ஏனெனில் நான் அப்பொழுது ஒரு நடிகராக இருந்தேன் 

அதோட என்னோட முதற் படத்தின் வெளியீட்டு விழாவின் செட்டில் இருந்த போது இது என் வாழ்நாளில் ஒரு மயில் கல் என்று நான் உணர்ந்தேன். அவ்வளவு பயமா இருந்துச்சு எனக்கு. இருந்தாலும் சினிமாவில் பத்து வருடங்களை பூர்த்தி செய்து விட்டேன்.

ஆரம்ப நாட்களை  நான் திரும்பி பார்த்தாலும் அங்கு போக முடியாது. நான் கடந்து வந்த பாதைகள் மிகவும் போராட்டகரமாக இருந்தது. கடினமான பாதையை கடந்து வந்தேன்.

மேலும் இந்த சினிமாவில் இருக்கிறது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமில்லை. மக்களை மகிழ்விக்கும் இந்தத் தொழில் கடினமான ஒன்றுதான் என நான் உணர்ந்துள்ளேன்." 

என்று அவர் பகிர்ந்து கொண்டார் 

Advertisement

Advertisement

Advertisement