• Oct 08 2024

நான் நடிச்ச பாத்ரூம் சீனுக்கு நிறைய ஃபேன்ஸ் இருக்காங்க; நடிகை பூமிகா

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகளில் இன்றுவரை மக்கள் மத்தியில் இடம்பிடித்து இருக்கின்றனர்.அந்த வகையில் ஹோம்லி லுக்கில் ஜானு என்ற கதாபாத்திரத்தில் நடித்து இன்று வரை அழியாத பெயருடன் இருப்பவர் தான் பூமிகா. மேலும் இவர் நடித்த முதல் படத்திலேயே இவருக்கு பல ரசிகர்கள் உருவாகிவிட்டனர். தான் நடித்த படங்களிலேயே இந்த சீனுக்கு பல ரசிகர்கள் இருப்பதாக இவர் கூறியிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது .

மேலும் பத்ரி படத்திற்கு பின்னர், தொடர்ந்து தெலுங்கில் கவனம் செலுத்தி வந்த நடிகை பூமிகா, ரோஜா கூட்டம் படத்தில் நடித்தார். இந்த படத்தில் ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு முக்கோண காதல் கதையாக அமைந்திருந்த ரோஜா கூட்டம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.அத்தோடு நடித்த இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், தமிழில் அவருக்க வாய்ப்பு அதிகமாக கிடைக்கவில்லை, தொடர்ந்து தெலுங்கிலேயே நடித்து வந்தார் நடிகை பூமிகா.

தெலுங்கில் இவர் நடித்த ஒகடு திரைப்படம் தமிழில் கில்லி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. மகேஷ் பாபு மற்றும் பூமிகா நடித்திருந்த கதாபாத்திரத்தில் தமிழில் விஜய் மற்றும் திரிஷா நடித்திருந்தனர். அத்தோடு தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு மொழிகளும் இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு 2006 ஆம் ஆண்டு வெளியான சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் நடித்தார் நடிகை பூமிகா. சூர்யா ஜோதிகா நடித்திருந்த இந்த படத்தில், சூர்யாவுக்கு கல்லூரி காலத்து காதலியாக நடித்து பலரின் பாராட்டுகளைப் பெற்றார் நடிகை பூமிகா.

மேலும் கல்லூரி பருவத்தில் பூமிகாவை காதலித்து ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொள்வார் சூர்யா. இது தெரிந்த அரசியல்வாதியான பூமிகாவின் அப்பா பூமிகாவை இழுத்துச் சென்று வெளிநாட்டிற்கு அனுப்பி விடுவார். பல வருடங்கள் கழித்து வேறு வழியில்லாமல் ஜோதிகாவை திருமணம் செய்து கொள்வார் சூர்யா. பல வருடங்கள் கழித்து இந்தியாவிற்கு திரும்பி வரும் பூமிகா, என்ன சொல்வார் அதன்பிறகு என்ன நடக்கிறது என்பது தான் படத்தின் கதை.

கல்லூரி பருவத்தில் பூமிகாவை துரத்தி துரத்தி காதலிப்பார் சூர்யா, இரவு நேரத்தில் சூரியா பூமிகாவிற்கு போன் செய்வார்.மேலும் பூமிகா ஃபோனை எடுத்துக் கொண்டு பாத்ரூமுக்கு சென்று சத்தம் போடாமல் அமைதியாக ரொம்ப பேசுவார்.

அத்தோடு அந்த சமயத்தில் பூமிகாவின் அம்மா வந்து பாத்ரூம் கதவைத் தட்ட ஒஸ்துநானுமா ஒஸ்துநானு என்று சொல்வார்.மேலும் இந்த சீன் மற்றும் டயலாக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகை பூமிகா, தான் நடித்த படங்களிலேயே இந்த ஒரு சீனுக்கு பல ரசிகர்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இவர் கூறிய இந்த விஷயம் சமூக வலைதளத்தில் அவர் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றது.

Advertisement