• May 18 2024

தனக்குத் தானே மாலை போட்டு கொண்டாரா தளபதி விஜய்? இன்னொரு ஆங்கிள் வீடியோ..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!


தளபதி விஜய் சமீபத்தில் திருவனந்தபுரத்தில் ரசிகர்களை சந்தித்த போது ஒரு ரசிகர் அவருக்கு மாலை போட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆன நிலையில் தற்போது இந்த வீடியோவின் இன்னொரு ஆங்கிள் வெளியாகியுள்ள நிலையில் அதில் விஜய் தனக்கு தானே அவர் மாலை போட்டுக் கொண்டதாக தெரிய வந்துள்ளது.

தளபதி விஜய் தற்போதுகோட்என்ற படத்தின் படப்பிடிப்புக்காக திருவனந்தபுரம் சென்றுள்ளார் என்பதும் அங்கு தினமும் அவர் படப்பிடிப்பு முடிந்த பின்னர் ரசிகர்களை சந்தித்து வருகிறார் என்பதையும் பார்த்தோம். ரசிகர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் சமீபத்தில் ரசிகர்களை சந்தித்த போது ஒரு ரசிகர் ஆர்வம் மிகுதியால் மாலை வாங்கி வந்ததை பார்த்த விஜய் அவர் அருகில் சென்று அவரிடம் இருந்து மாலையை வாங்கி போட்டுக் கொண்டார்.

தனக்காக மாலை வாங்கி வந்த தன்னுடைய ரசிகனை ஏமாற்றக்கூடாது என்பதற்காக விஜய் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி ரசிகர் அருகில் சென்றது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் அவர் தனக்குத் தானே மாலை போட்டு கொண்டது ட்ரோல் மெட்டீரியலாக மாறியுள்ளது.


இந்த வீடியோவின் ஒரு  ஆங்கிள்   மட்டும் இணையத்தில் வெளியான நிலையில் தற்போது ரசிகர்கள் கூட்டத்தில் இருந்து ஒரு ரசிகர் எடுத்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் மாலை கொடுத்த ரசிகரின் அருகில் சென்ற விஜய் ஒரு கட்டத்தில் அந்த மாலையை கையில் வாங்கி தனக்கு தானே போட்டுக் கொண்டது துல்லியமாக தெரிய வருகிறது. இதனை அடுத்து ரசிகரின் கையால் மாலை போட்டு கொள்ளாமல் தனக்குத்தானே மாலை போட்டுக்கொண்டு தான் இவ்வளவு பில்டப் செய்கிறாரா என்று விஜய்க்கு எதிரானவர்கள் சமூக வலைதளத்தில் ட்ரோல் செய்து வருகின்றனர்.  



Advertisement

Advertisement