தமிழ்த் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருப்பது விஜய்த் தொலைக்காட்சியாகும். இதில் பல நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என்பன சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அத்தோடு இதில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கென்று ஓர் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது
அந்த வகையில் இதில் ஹிட்டாக ஓடும் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி. இதில் குடும்பத்தை கவனிக்கும் ஒரு குடும்ப தலைவியின் போராட்டத்தை பற்றி கதை அழகாக பேசுகிறது, கதையோடு பலரின் வாழ்க்கையும் ஒத்துப்போவதால் இந்த சீரியலுக்கு பெரிய ரீச் கிடைத்துள்ளது எனலாம்
இப்போது தான் கதையில் கொஞ்சம் விறுவிறுப்பு அதிகரித்து வருகின்றது எனலாம்.அந்த வகையில் இந்த சீரியலில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை சுசித்ரா ஷெட்டி.
தனது 14 வயதிலேயே நடிகர் உபேந்திராவின் தங்கையாக கன்னட திரைப்படத்தில் அறிமுகமாகி விட்டார். தொடர்ந்து கன்னட சினிமாவில் 15-க்கும் மேற்பட்ட படத்தில் நடித்துள்ளார்.திருமணத்திற்கு பின் மாங்கல்யா என்ற கன்னட சீரியல் மூலம் சின்னதிரையில் அறிமுகமாகி தொடர்ந்து காவியஞ்சலி, ஈஸ்வரி, ராதா ரமணன் உள்ளிட்டவற்றில் நடித்தார்.
தனது திறமையான நடிப்பின் மூலம் தெலுங்கிலும் வாய்ப்பு பெற்ற இவர் ஜெமினி டிவி சீரியல்களில் நடித்தார். இதனை தொடர்ந்து கலைஞர் டிவியில் நாணல் என்ற சீரியலில் நடித்தார். ad shoot ஒன்றில் இவரது நடிப்பு திறமையை பார்த்த டைரக்டர் ஏ.எல்.விஜய், தனது சைவம் திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கொடுத்தார்.
இதன் பின்னர் தற்போது பாக்கியாவாக நடித்து ஒவ்வொரு வீட்டிலும் அம்மாக்கள் படும் சிரமங்களை பாக்கியலட்சுமி சீரியல் மூலம் ரசிகர்களுக்கு உணர்த்தி இருக்கிறார்.
இந்நிலையில் சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் நடிகர் பிரபு தேவாவுடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அது ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.
இதோ அவரின் பதிவு…
Listen News!