• Sep 08 2024

சௌந்தர்யா ரஜினியின் 3வது கணவரா? இன்ஸ்டாவில் அதிர்ச்சி புகைப்படம்..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படத்துக்கு ஒருவர் ’நான் கூட உங்களது மூன்றாவது கணவர் என்று நினைத்தேன்’ என்று கமெண்ட் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஜினிகாந்த் மகள்  சௌந்தர்யா   கடந்த  கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில்  2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருந்த நிலையில்  2019 ஆம் ஆண்டு விசாகன் என்பவரை சௌந்தர்யா திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் சில படங்களுக்கு கிராபிக் டிசைனராக பணிபுரிந்த சௌந்தர்யா,’ கோச்சடையான்’ என்ற திரைப்படத்தை முழுக்க முழுக்க கிராபிக்ஸ் காட்சிகளால் உருவாக்கினார், அதன் பின்னர் தனுஷ் நடித்த ’வேலையில்லா பட்டதாரி 2’ படத்தையும் இயக்கினார்  தற்போது அவர் ஓடிடிக்காக ஒரு வெப் தொடரை இயக்கி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் இன்ஸ்டாவில் ஆக்டிவ்வாக இருக்கும் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவருடன் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் ’என் அன்பு கணவருடன் இந்த மாதம் நாங்கள் கொண்டாடிய இரண்டு வித்தியாசமான மற்றும் மிகவும் சிறப்பான நிகழ்வுகள்’ என கேப்ஷன் ஆக பதிவு செய்துள்ளார்.

இந்த பதிவுக்கு ஏராளமான கமெண்ட்கள் பதிவாகி வரும் நிலையில் ஒரு நெட்டிசன் ’நல்ல வேலை இரண்டாவது புகைப்படத்தில் விரிவாக பதிவு செய்தீர்கள், நான் கூட உங்களின் மூன்றாவது கணவர் என்று நினைத்தேன்’ என்று தெரிவித்துள்ளார். இதுபோன்ற ஒரு சில சர்ச்சைக்குரிய கமெண்ட்ஸ் வந்தாலும் பெரும்பாலான கமெண்ட்களில், ‘பொருத்தமான ஜோடி’ என்றும் ’சூப்பர் ஜோடி’ என்றும் ’உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்’ என்றும் பதிவாகி வருகின்றன.


Advertisement

Advertisement