• Apr 27 2024

விவகாரமான காட்சியில் நடிக்க முடியாது என கூறிய சினேகா.. சினேகா இல்லாமல் நடந்த படப்பிடிப்பு..!

Sivalingam / 4 weeks ago

Advertisement

Listen News!

நடிகை சினேகா ’விரும்புகிறேன்’ என்ற திரைப்படத்தில் தான் அறிமுகமான நிலையில் அந்த படத்தின் ஒரு முக்கிய காட்சியில் நடிக்க முடியாது என்ற கூறிவிட்டதாகவும் இதனை அடுத்து ஒரு துணை நடிகரை வைத்து அந்த காட்சியை இயக்குனர் படமாக்கியதாக பல வருடங்களுக்கு பின் தற்போது உண்மை தெரிய வந்துள்ளது. 

பிரசாந்த் நடித்த ’விரும்புகிறேன்’ என்ற திரைப்படம் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தை சுசி கணேசன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் தான் நாயகியாக சினேகா அறிமுகமானார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது சினேகா மற்றும் சசி கணேசன் ஆகிய இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. 

தயாரிப்பாளரின் சிபாரிசில் தான் சினேகா இந்த படத்தில் வந்த நிலையில் ஆரம்பத்திலேயே இருவருக்கும் பிடிக்கவில்லை என்றும் வேண்டுமென்றே சில காட்சிகளை மீண்டும் மீண்டும் சசி கணேசன் எடுத்து சினேகாவை வெறுப்பேத்தியதாக கூறப்படுகிறது. 



இந்த நிலையில் தான் ஒரு கிணற்றுக்குள் சினேகா இறங்கி நடிக்க வேண்டிய ஒரு காட்சி இந்த படத்தில் இருந்த நிலையில், தனக்கு தண்ணீர் என்றால் பயம் என்றும் அதனால் நடிக்க முடியாது என்றும் சினேகா கூறியதாக தெரிகிறது. ஒரு வழியாக பிரசாந்த் அவரை சமாதானப்படுத்தி அந்த காட்சியில் நடிக்க வைத்த போது தான் அந்த கிணற்றுக்குள் இருந்து தண்ணீரில் ஏகப்பட்ட பாம்பு இருந்ததை பார்த்து சினேகா அதிர்ச்சி அடைந்தார்.  

இதனை அடுத்து கண்டிப்பாக இந்த காட்சியில் தன்னால் நடிக்க முடியாது என்றும் இந்த படத்தில் இருந்து விலகினாலும் பரவாயில்லை, எனக்கு சம்பளமே வேண்டாம், என்னை ஆள விடுங்கள் என்று கூறிவிட்டு அவர் சென்று விட்டதாக தெரிகிறது. அதன்பின்னர் துணை நடிகர் ஒருவருக்கு சினேகா போன்ற காஸ்டியும் பயன்படுத்தி முதுகு பக்கமாக கேமராவை வைத்து இந்த காட்சியை சுசி கணேசன் இயக்கியதாக சமீபத்தில் பிரபல சினிமா பத்திரிகை ஆசிரியர் ஒருவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் கழித்து தான் இந்த காட்சியில் சினேகா நடிக்கவில்லை என்றும் ஒரு துணை நடிகரை வைத்து இந்த காட்சி படமாக்கப்பட்டது என்பதும் ரசிகர்களுக்கு தெரிய வந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement