சிவகார்த்திகேயன் தமிழின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இப்போது இருக்கிறார். அவருக்கென்று சிறுவர்கள், சிறுமிகள் ரசிகர் ரசிகைகளாக இருக்கின்றனர். ஆரம்பத்தில் தடுமாறிய சிவகார்த்திகேயன் போகப்போக தனது திறமையை வளர்த்துக்கொண்டார்.
இறுதியாக வெளிவந்த பிரின்ஸ் படம் கொடுத்த அடியால் தனது அடுத்த அடியை நிதானமாகவும், கவனமாகவும் எடுத்து வைக்க ஆரம்பித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அதன்படி மண்டேலா படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் தற்போது நடித்து முடித்திருக்கிறார்.
அடுத்ததாக கமல் ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். மாவீரன் படம் ஜூலை 14ஆம் தேதி ரிலீஸாகிறது.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் புதிய தொழில் தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதாவது, ஏசியன் சினிமாஸ் என்ற நிறுவனத்துடன் இனைந்து ASK (ஏசியன் சிவகார்த்திகேயன்) சினிமாஸ் என்று சென்னையில் திரையரங்குகள் தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.
இந்தத் தகவல் சிவகார்த்திகேயன் ரசிகர்களை குஷிப்படுத்தினாலும் ஏற்கனவே அவருக்கு 60 கோடி ரூபாய்க்கும் மேல் கடன் என்ற ஒரு தகவல் பல காலமாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் இருக்கும் கடனில் இந்தத் தொழில் தேவைதானா முதலில் கடனை அடைத்துவிட்டால் நல்லதுதானே என எஸ்கே ரசிகர்கள் அக்கறையுடன் இணையத்தில் கூறிவருகின்றனர்.
Listen News!