• Jul 03 2024

கடைசி நாள் படப்பிடிப்பில் பிரியாணி போட்டு அசத்திய சிவகார்த்திகேயன்.. இப்படி ஒரு ஹீரோவா?

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் 'அமரன்’ மற்றும் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ’எஸ்கே23’ ஆகிய இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது 'அமரன்’ படத்தின் படப்பிடிப்பை அவர் முடித்து விட்டார் என்ற செய்திகள் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் 'அமரன்’ படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு நடந்தபோது படக்குழுவினர் அனைவருக்கும் அவர் பிரியாணி விருந்து வைத்ததாகவும் அவரே அனைவருக்கும் பரிமாறி வயிறார சாப்பிடுங்கள் என்று சந்தோசமாக கூறியதாகவும் தெரிகிறது. இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக கடைசி நாள் படப்பிடிப்பு என்றாலே குரூப் புகைப்படம் எடுத்துக் கொண்டு கேக் வெட்டி படப்பிடிப்பை முடித்துக் கொள்வார்கள். ஆனால் சிவகார்த்திகேயன் வித்தியாசமாக அனைவருக்கும் பிரியாணி விருந்து வைத்து அசத்தி உள்ளார் என்பதும் இந்த பிரியாணிக்கான முழு செலவையும் அவரே ஏற்றுக் கொண்டார் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி படக்குழுவினர் அனைவருக்கும் அவரே தன் கைப்பட பரிமாறியதை பார்த்து நெகிழ்ச்சி அடைந்தனர். சின்ன சின்ன நடிகர்கள் முதல் சின்ன சின்ன தொழில்நுட்ப கலைஞர்கள் வரை அனைவருக்கும் தனது நன்றியை தனித்தனியாக அவர் தெரிவித்து தெரிவித்தது அவருடைய மனிதநேயத்தை காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் 'அமரன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்த கட்டமாக இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகளை தொடங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. டப்பிங் உட்பட மற்ற தொழில்நுட்ப பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சிவகார்த்திகேயன் தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ’எஸ்கே23 ’படத்திலும் நடித்து வரும் நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும் அடுத்த மாதத்திற்குள் அந்த படத்தின் படப்பிடிப்பும் முழுமையாக முடிந்து விட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement