• May 18 2024

ஆதி கல்யாணம் நடக்கணும்னா நீ போலீஸ் வேலைய விடனும் என்று கூறிய சிவகாமி- ஊர் மக்கள் முன்னாடி நடக்க இருக்கும் முக்கிய விடயம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ராஜா ராணி சீசன் 2. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடந்தது என்று பார்ப்போம்.வேறு மதத்தை சார்ந்த ஜெசி அவளுடைய மதத்தை பற்றியும் அவளுடைய அப்பா அம்மா யார் என்பதை பற்றி வெளியில் சொல்லிக் கொள்ளக் கூடாது முழுவதுமாக அதை அனைத்தையும் தூக்கிப் போட்டு விட்டு வர வேண்டும் என என சிவகாமி சொல்லுகிறார்.

இதனால் கோபம் கொண்ட  சந்தியா இது நிச்சயம் நடக்காத விஷயம் இது ரொம்ப அநியாயம் என பேச குறுக்கிடும் வள்ளி பாட்டி சிவகாமி இதுதான் குடும்பம் நடத்துற லட்சணமா மருமகளை இப்படித்தான் பேசவிட்டு வேடிக்கை பார்ப்பாயா நீ புத்திசாலி என்று நினைத்தேன் ஆனா இப்படி ஒரு கேனையா இருக்க என திட்டுகிறார். எது நடந்தாலும் குடும்ப கௌரவம் முக்கியம் எனக்கு இதுல சுத்தமா விருப்பமில்லை என சொல்லி விட்டு வள்ளி சென்று விடுகிறார்


பிறகு சந்தியா நீங்க இப்படி எல்லாம் கண்டிஷன் போட்டா ஜெசி அப்படி ஒரு கல்யாணமே எனக்கு வேண்டாம் நான் தனியாகவே இருந்துக்கிறேன் என முடிவெடுத்தால் அந்த குழந்தை அப்பா இல்லாமல் வளரும்‌. அது உங்களுக்கு பரவாயில்லையா எனக் கேட்க சிவகாமி நீ சொல்றது எல்லாம் சரிதான் ஆனால் இந்த விஷயத்தில் முடிவெடுக்க வேண்டியது நான் இல்லை அத்தை அவங்க கிட்ட பேசி ஊர் மக்கள் முன்னாடி பேசி அவங்களுக்கு புரிய வச்சு கல்யாணத்தை உன்னால நடத்த முடியுமா? என சவால் விட ஒரு வேலை இந்த சவாலில் தோற்று விட்டால் என்னத்த செய்வீங்க என சந்தியா கேக்க நீ போலீஸ் ஆக கொடுத்த அனுமதியை திரும்ப வாங்கிப்பேன் நீ வேலைக்கு போகக்கூடாது என அதிர்ச்சி கொடுக்கிறார்.

சந்தியா இந்த சவாலை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. இது என்னுடைய சம்பந்தப்பட்ட விஷயமாக இருந்திருந்தால் நான் உடனே முடிவெடுத்து இருப்பேன் ஆனால் ஆதி ஜெசி குழந்தை என மூன்று உயிர்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என கூறுகிறார். இதனால் சிவகாமி வேற வழி கிடையாது நீ அப்படியே பேசி சம்மதிக்க வைக்கிறது தான் ஒரே வழி என கூறி விடுகிறார்.


பிறகு சந்தியாவும் சரவணனும் ஒரு வழியாக ஆதி உண்மையை ஒத்து கொண்டது பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். இதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் நீங்க ஐபிஎஸ் ஆக வேண்டிய வேலைகள் மட்டும் பாருங்க என சரவணன் கூறுகிறார். பாட்டியை ஈசியா சம்மதிக்க வைக்கலாம் என சந்தியா கணக்கு போடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.


Advertisement

Advertisement