• Oct 08 2024

ரவீனாவை பங்கமாக கலாய்த்த மாயா; கைத்தட்டி சிரித்த மக்கள்! கடுமையாக எச்சரித்த ஆண்டவர்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தற்போது மேலும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிது. எனினும், அனன்யா ராவ், பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன் ஆகியோர் எலிமினேட் ஆகியுள்ளனர்.

மேலும், பிக்பாஸ் வரலாற்றில் இம்முறை  மேலும் ஐந்து பேர் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பிவைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் விதிமுறைகளை மீறினால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கமல்ஹாசன் எச்சரித்துள்ளமை சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகியுள்ளது.


இவ்வாறு பிக்பாஸ் சீசன் 7 விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கும் நிலையில், போட்டியாளர்களுக்கு இடையே கடுமையான டாஸ்க்கள் நடைபெற்று  வருகிறது. 

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஹவுஸ் மேட்ஸ்கள்  டாஸ்க்கில் ஒழுங்காக விளையாடாத காரணத்தினால் அவர்களுக்கு 'சுவையான உணவு தரப்படாது' என கூற,  பிக்பாஸ் வீட்டில் இருந்த மாயா, ரவீனா, கூல் சுரேஷ் மூன்று பேரும் ஸ்மால் பாஸ்ட் வீட்டிற்கு  சென்று சாப்பிட முயற்சி செய்தனர். எனினும் அந்த நேரத்தில் கேஸ் தடை செய்யப்பட்டது.


இதையடுத்து, ஸ்மால் பாக்ஸ் வீட்டில் இருந்த பிரதீப் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றார். அதன்பின் கேப்டன் பூர்ணிமா அவர்களிடம் பேசி மீண்டும் ரவீனாவை பிக்பாஸ் வீட்டிற்கு அழைத்தார். இவ்வாறு மாறி மாறி விதி மீறல்கள் நடந்தது. இவ்வாறு விதி மீறல்களை கவனித்த கமல்ஹாசன் போட்டியாளர்களை எச்சரித்துள்ளார். 

அத்துடன், 'ரவீனா ஏன் வரல' என்று கமல் கேட்க, அதற்கு மாயா 'ஏன்னா அவங்க சாப்பாட்டுக்காக போகல சார்' எனக் கூற மக்களும் கைத்தட்டி சிரிக்கின்றனர். 

அதேவேளை, மேலும் கூறிய கமல்ஹாசன் 'விதிமுறைகளை பிரேக் பண்ணிக்கிட்டே இருக்க கூடாது. அவற்றிற்கான எச்சரிக்கை தான் இது இல்லையென்றால் கரண்ட் கூட கட் ஆகலாம்' என மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement