விஜய் டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியானது ஆரம்பித்து இரண்டு வாரங்கள் ஆகிட்டன என்பதோடு போட்டியில் 21 போட்டியாளர்கள் பங்குபற்றி வருகின்றனர். அத்தோடு இந்த வாரம் யார் வீட்டை விட்டு வெளியேறப் போகின்றார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகக் காணப்படுகின்றது.
அந்த வகையில் 10 நாள் இரவு நடந்த நிகழ்வுடன் ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி கிச்சனில் நின்று கொண்டிருக்கும் போது அசல் மற்றும் தனலக்ஷ்மிக்கு இடையில் மோதல் ஏற்பட்டு விடுகின்றது. அதில் தனலக்ஷ்மி அசல் தன்னை பெரியம்மா ஆன்ட்ரி போன்ற வார்த்தைகளால் திட்டுவதாக சத்தம் போடுகின்றார். இவர்களின் பிரச்சினையை முடிக்க அசீம் தனத்தை வெளியில் கூட்டிட்டு போகும் போது விக்ரமனுக்கும் அசீமுக்கும் இடையில் மோதல் ஏற்படுகின்றது. பின்பு அந்த மோதல் ஏ டிகே ,ஜி பி முத்து, விக்ரமன் ஆகியோருக்கிடையில் சிறிய மோதல் ஏற்படுகின்றது.
பின்னர் அடுத்த 11ம் நாள் காலை பிகில் பாடலுடன் ஆரம்பித்தது. கிச்சனில் நின்று தனலக்ஷ்மி சண்டை போட்ட விடயத்தைப் பற்றி ரச்சிதாவும் மைனாவும் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து குயின்சி எனக்கு மாமன் பொண்ணு என்று ராம் ஐஸ் வைக்க ஜிபி முத்து வந்த ராமை கலாய்க்கின்றார். இதனைத் தொடர்ந்து அமுதவாணன் பதிலுக்கு ஜி.பி முத்துவை கலாய்க்கின்றார்.
பின்னர் கதை சொல்லும் நேரம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் படி ராபேட் மாஸ்டர் ,குயின்ஸி, ஆயிஷா ,ரச்சிதா, சாந்தி மாஸ்டர், விக்ரமன், மணிகண்டன் ஆகியோர் தமது கதைகளை கூறினார்கள். இதில் ராபேட் மாஸ்டரின் கதையைத் தவிர ஏனையோரின் கதை நிராகரிக்கப்பட்டது. இது தவிர நடனம் ஆடுமு் லட்ஜரி பட்ஜெட் நடனம் நடைபெற்றது. அதில் அஸீம் தோற்றதால் குயின்சி கதிரவனிடம் அவரின் நடனம் குறித்து கலாய்த்துக் கொண்டிருந்தார்.
தொர்ந்து அசல் நிவாஷினியின் மடியில் படுத்துக் கொண்டு பாட்டுப்பாடிக் கொண்டிருந்தார். இதனால் அமுதவாணன் அசலை போல நடனமாடி கேலி செய்து கொண்டிருந்தார். தொடர்ந்து ட்ரென்ஸ் நிறுவனத்திடம் இருந்து தீபாவளியை முன்னிட்டு ஆடை கலக்ஷன் வந்திருந்தது. போட்டியாளர்கள் இதனை அணிந்து தமது தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைந்தது.
Listen News!