• May 19 2024

சரஸ்வதியை கண்டபாட்டுக்கு திட்டிய ராகினி- தமிழுக்கு எதிராக அர்ஜுன் போட்ட புது பிளான்- சரஸ்வதிக்காக பேசிய கோதை

stella / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்பபோம்.

வளைகாப்பு வீட்டில் சரஸ்வதியை அவமானப்படுத்தியதால் சரஸ்வதியும் தமிழும் கோயிலில் இருந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.தமிழ் எனக்குக் கூட குறை இருக்கலாம் தானே எதுக்காக உனக்கு மட்டும் குறை இருக்கு என்று எப்படி நினைப்ப எல்லாம் சரி ஆகிடும் யோசிக்காத என்று சொல்லி ஆறுதல்ப்படுத்திவிட்டு இருவரும் எழும்பி செல்கின்றனர்.


அப்போது கோதையை இருவரும் காண சரஸ்வதி தனது மாமனாரிடம் நன்றி தெரிவிக்கின்றனர்.அப்போது கோதை குழந்தை பிறக்காது என்று யார் சொன்னாங்க, பொறுமையாக இருங்க எல்லாம் நல்லது நடக்கும்.பிழை செய்தவங்க தண்டிக்கபடுவது சரி தான் எந்த தப்புமே பண்ணாம அவமானப்படுத்திறது தப்பு அதைத் தான் கேட்டேன் என்று சொல்லி விட்டு அங்கிருந்து செல்கின்றார்.

தொடர்ந்து தமிழும் சரஸ்வதியும் ஹாஸ்பிட்டலுக்குச் சென்று தமக்கு குழந்தை இல்லை, அதுக்கு செக் பண்ண வந்திருக்கிறோம் என்று சொல்ல டாக்ர் சில செக்கப்புக்கள் பண்ணனும் என்று சொன்னதும் இருவரும் செக்கப் பண்ணுகின்றனர். மறுபுறம் சரஸ்வதிக்கு சர்ப்போட் பண்ணியதற்காக ராகினி கோதையை திட்டுகின்றார்.

அத்தோடு சரஸ்வதி செய்த பாவத்திற்கு தான் இன்னும் குழந்தையே பிறக்காமல் இருக்குது, இந்த ஜென்மத்தில அவங்களுக்கு குழந்தையே பிறக்காது என்று சாபம் போட இதைக் கேட்ட கோதை அதிர்ச்சியடைந்து ராகினியைத் திட்டுகின்றார். கோதையும் சேர்ந்து நடேசன்,வசுவும் ராகினியைத் திட்டுகின்றனர்.


தொடர்ந்து எல்லோரும் போனதும் கோதை தமிழ் கோயிலில் இருந்து சரஸ்வதியை அவசர அவசரமாக கூட்டிட்டு போனான் எங்க போயிருக்கிறாங்க என்று ஃபோன் பண்ணி கேள் என்று சொல்ல, வசுவும் ஃபோன் பண்ணிக் கேட்க தாங்க இருவரும் ஹாஸ்பிட்டலில் செக்கப்புக்கு வந்ததாக சொல்கின்றனர்.

இதை ஒழிந்து நின்று கேட்ட அர்ஜுனின் மாமா ராகினியிடம் போய் சொல்ல ராகினி போய் கேட்கப் போகின்றேன் என்று கோபப்பட, அர்ஜுன் சமாதானப்படுத்துகின்றார். தொடர்ந்து ராகினி அப்பாவுக்கு 60வது பிறந்தநாள் வருது என்று சொல்ல அர்ஜுன் அப்போ நாம இதை அறுபதாவது கல்யாணமாக பெருசா பண்ணிடுவோம் என்று சொல்ல ராகினியும் சம்மதித்ததோடு இதனை நடேசன் மற்றும் கோதை கிட்ட சென்று பேசுகின்றனர். இதனால் நடேசன் அதிர்ச்சியில் இருக்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement