• Apr 30 2024

முதல்முறையாக கதறியழுத ரக்ஷிதா மகாலட்சுமி.. பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் காரணமா?

Sivalingam / 1 week ago

Advertisement

Listen News!

பல தமிழ் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சில திரைப்படங்களில் நடித்த ரக்சிதா மகாலட்சுமி முதல் முறையாக ஒரு புதிய முயற்சி எடுத்துள்ளதாகவும் அதுவும் பாலாஜி முருகதாஸ் உடன் சேர்ந்து பணிபுரியும் ஒரு திரைப்படத்தில் இந்த முயற்சியை எடுத்துள்ளதாகவும் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி ஏராளமான தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர் என்பதும் ’பிரிவோம் சந்திப்போம்’ ’இளவரசி’ ’சரவணன் மீனாட்சி’ ’நாச்சியார்புரம்’  உள்ளிட்ட பல சீரியல்கள் நடித்துள்ளார். மேலும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார் என்பதும் 91 நாட்கள் வரை அவர் தாக்கு பிடித்து இருந்தார் என்பது தெரிந்தது.

அது மட்டும் இன்றி சில திரைப்படங்களிலும் ரக்ஷிதா   மகாலட்சுமி நடித்திருக்கிறார் என்பதும் 'உப்பு கருவாடு’ ’மெய் நிகரே’ போன்ற படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 



இந்த நிலையில் ரக்ஷிதா   மகாலட்சுமி நடித்து வரும் படங்களில் ஒன்று ’பயர்’ என்பதும் இந்த படத்தில் பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் இந்த படத்தில் தன்னுடைய கேரக்டருக்கு முதல் முறையாக தான் டப்பிங் செய்துள்ளதாகவும், தான் டப்பிங் செய்ய தயங்கிய போது பாலாஜி முருகதாஸ் தான் தனக்கு ஊக்கம் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர்  கதறி அழுத காட்சி ஒன்றுக்காக டப்பிங் செய்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.



Advertisement

Advertisement

Advertisement