தமிழ் சினிமாவில் 90களில் ரஜினி, கமல் என்று ஸ்டைலான நடிகர்கள் இருந்த நிலையில் இவர் வெறும் அரை ட்ரவுஸரில் நடித்து படத்தை 100 நாட்களுக்கு மேல் ஓடவைத்தவர் தான் நடிகர் ராமராஜன். இவர் நம்ம ஊரு நல்ல ஊரு என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த திரைப்படம் தான் கரகாட்டக்காரன்.இப்படம் தற்பொழுதும் ரசிகர்களைக் கவர்ந்த திரைப்படமாகவே காணப்படுகின்றது. இதனிடையே ராமராஜன் தன்னுடன் பல படங்களில் நடித்த நளினியை 1987 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஒரு பெண் பிள்ளை இருக்கும் நிலையில் கடந்த 2000 ஆம் ஆண்டு நளினியை விவாகரத்து செய்து விட்டார்.இதனை அடுத்து அரசியலில் அதிக ஈடுபாடு காட்டி வந்த இவர் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சாமானியன் என்ற படத்தில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பு தளத்திலிருந்து ராமராஜன் அவர்கள் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர் கீர்த்தி சுரேஷ் குறித்து கூறியிருந்தது, எல்லோருமே தற்போது நன்றாக தான் செய்து கொண்டிருக்கிறார்கள். நான் டிவியில் தான் பாடல்கள், காமெடி எல்லாம் பார்க்கிறேன். சினிமாவில் வரும் ஹீரோக்கள் பல கஷ்டங்கள், அவமானங்கள் எல்லாத்தையும் தாண்டி தான் அந்த இடத்தில் வந்து நிற்கிறார்கள். கஷ்டப்படாமல் யாரும் வந்திருக்க மாட்டார்கள். அதனால் தான் ஒருத்தரோட இடத்தை இன்னொருத்தரால் நிரப்பிட முடியாமல் இருக்கிறது.
இங்கே திறமை, உழைப்பு எல்லாம் தாண்டி நேரம், காலமும் அமையனும். அந்த காலத்து கதாநாயகிகளில் சரோஜாதேவி, சாவித்திரி, கே ஆர் விஜயா என்ற எல்லோரும் இன்றும் எல்லாருடைய மனதிலுமே இருக்கிறார்கள். இப்போ அப்படி கீர்த்தி சுரேஷ் தான் இருக்கிறார். காரணம் என்னவென்றால், அவர் நடிகையர் திலகம். அதில் அவரின் எப்பேர்பட்ட நடிப்பு. அதேபோல் மனோரமா ஆட்சி ஆயிரம் படங்கள் நடித்து இருக்கிறார். அந்த பெருமை இப்போ யாருக்குமே இல்லை என்று கூறியிருந்தார்.
Listen News!