• May 18 2024

கார்த்திக்கிற்கும் அனுவிற்கும் இடையில் ஏதோ தொடர்பு இருக்கு என சந்தேகப்படும் முருகன்- அதிர்ச்சியில் சுந்தரி

stella / 10 months ago

Advertisement

Listen News!


சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சுந்தரி. இதில் தற்பொழுது கார்த்திக் பற்றிய உண்மைகள் கொஞ்சம் கொஞ்சமாக எல்லோருக்கும் தெரிய வருகின்றது.

அத்தோடு கார்த்திக் சுந்தரியை தான் முதல் திருமணம் செய்தார் என்ற விஷயம் எப்போது அனுவுக்கு தெரிய வரும் என்பதை அறிய ரசிகர்களும் ஆவலாக இருக்கின்றனர். 


இப்படியான நிலையில் தற்பொழுது ஓர் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் முருகன் மாமா அனு ஆபிஸிற்கு போக வேணாம் என்று சொல்லியும் கார்த்திக் அங்கேயே அடிக்கடி போவதால் கார்த்திக் ஏதோ பிரச்சினையில் மாட்டி இருப்பதாகவும் அதனை தான் அறியாமல் விடமாட்டேன் என்றும் முருகன் கூறுகின்றார்.

மேலும் அனு சுந்தரிக்கு கார்த்திக் மீது ஆசை இருப்பதாக தவறாக நினைத்துக் கொண்டு இருப்பதால் அனுவின் அம்மா கார்த்திக்கிடம் உன்னால என் பொண்ணு நிம்மதிஇல்லாமல் இருக்கிறா அவளுக்கு ஏதாவது நடந்தால் சும்மா விடமாட்டேன் என்றும் திட்டுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement