• May 18 2024

கவலையில் இருக்கும் மூர்த்தியை திட்டிய முல்லையின் அம்மா- தனத்தை ஆறுதல்படுத்திய ஐஸ்வர்யா- கதிர் எடுத்த முடிவு

stella / 11 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

முல்லையின் அம்மா தனத்திடம் முல்லைக்கு இப்படி ஆனது குறித்து புலம்பிக் கொண்டிருக்கின்றார். அவளுக்கு மட்டும் ஏன் இப்பிடி நடக்குது. ஆசைப்பட்டவனை கல்யாணம் பண்ணிக்க முடில. அப்பிறம் ரெண்டு பேரும் புரிஞ்சு கிட்டு வாழ ஆரம்பிச்சாங்க. கஷ்டப்பட்டு குழந்தையை சுமந்தா. இப்போ இப்படி ஆச்சு என்று புலம்புகின்றார்.


அதற்கு தனம் கவலைப்படாதீங்க முல்லை நீங்க ஆசைப்பட்ட மாதிரி பெண் குழந்தை பெத்திட்டு வருவா, கதிரும் முல்லையும் ஒன்றாத் தான் இருப்பாங்க கவலைப்படாதீங்க என்று சொல்கின்றார். தொடர்ந்து ஹாஸ்பிட்டலில் கதிர் ஜுவாவிடம் முல்லை தான் என்னை மனுஷனாவே மாத்தினாள், என் கோவத்தை குறைச்சதே அவ தான்.

அவளுக்கு மட்டும் ஏதாச்சும் நடந்தால் நானும் உயிருடன் இருக்கமாட்டேன் என்று புலம்ப ஜீவாவும் மீனாவும் கதிரை ஆறுதல்ப்படுத்துகின்றனர். அவர்களைத் தொடர்ந்து மூர்த்தி தனது அப்பா அம்மாவின் போட்டோவுக்கு முன்னால் நின்று கதிர் பற்றி புலம்புகின்றார். குழந்தை கிடைச்சு சந்தோஷமாக இருக்கனும் என்று சொல்லி அழுது வேண்டுகின்றார்.


தொடர்ந்து தனம் கோயிலில் இருந்து முல்லைக்காக வேண்டிக் கொண்டிருக்கும் போது ஐஸ்வர்யா சமாதானம் செய்து தனத்தை வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றார். முதலில் வீட்டுக்கு போற மறுத்த தனம் பின்னர் பாண்டியனுக்காக போகின்றார். பின்னர் வீட்டில் மூர்த்தி முல்லையின் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சாப்பாடு கெடுக்கின்றார்.

அப்போது முல்லையின் அம்மா உங்க வீட்டு ராசி தான் என் பொண்ணு மேல ஒட்டிருச்சு. இந்த வீட்டில என் பொண்ணை கல்யாணம் பண்ணி தந்திருக்கக் கூடாது என்று சொல்கின்றார்.இதைக் கேட்ட மூர்த்தி அதிர்ச்சியடைகின்றார்.அத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement