• May 18 2024

ஈஸ்வரியிடம் தனது காதலைச் சொன்ன ஜீவானந்தம்- ஜனனியிடம் பணத்திற்கு போய் நின்ற கதிர்- எதிர்பாராத திருப்பங்களுடன் எதிர்நீச்சல் சீரியல்

stella / 9 months ago

Advertisement

Listen News!


சன் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதாவது ஜனனி கோபமாக வந்து உங்களுக்கு என்ன வேணும் என்று கேட்க, கதிர், கதிர் ஐந்து கோடி சொத்து வேணும் போய் எடுதத்திட்டு வா என்று சொல்கின்றார்.

இதனால் நந்தினி சொத்தெல்லாம் போகப் போகுது என்று தெரிஞ்சிடுச்சா இவகிட்ட கடன் கேட்டு நிற்கிறீங்க என்று சொல்கின்றார். மறுபுறம் ஜீவானந்தத்திதை சந்தித்த ஈஸ்வரி நீங்க பண்ணுறது எரிச்சலாக இருக்கு என்று சொல்கின்றார்.


அப்போது ஜீவானந்தம் ஈஸ்வரிக்கு இந்த மாதிரி கோபமே வராதுங்க, உங்க அப்பா குணசேகரனை கல்யாணம் பண்ணி வைச்சிட்டாருங்க, நீங்க அதுக்கப்பிறம் அந்த பையனை நினைக்க வாய்ப்பில்லை. அந்தப் பையன் பேரு ஜீவானந்தம் என்று சொல்கின்றார்.

இதைக் கேட்டு ஈஸ்வரி கண்ணீர வடிக்கின்றார். ஜீவானந்தம் எதுவும் சொல்லாமல் போகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.

Advertisement

Advertisement