• May 18 2024

இந்த விடயம் மட்டும் நடக்காவிட்டால் விஜய்யின் மூடே மாறிடும்.. செய்யார் பாலு பகீர் பேட்டி..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் குறித்து அவ்வப்போது பல அப்டேட்டுகள், வதந்திகள் வெளியாகிய வண்ணம் தான் இருக்கின்றன. அந்தவகையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் பத்திரிக்கையாளர் செய்யார் பாலு கூறிய விடயமானது அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.


அதாவது அதில் அவர் கூறுகையில் "விஜய் எப்போதுமே ஒரு கதை கேட்டிட்டால் அந்தக் கதை கேட்ட பிறகு இயக்குநர்களுடைய விடயத்தில் தலையிடவே மாட்டார். இது குறித்து அவர் பழைய ஒரு பேட்டி கூடக் கொடுத்திருக்கார்.

என்ன காரணம் எனில், நான் ஒரு இயக்குநருடைய மகனாக நான் என் அப்பா பட்ட கஷ்டம் எல்லாம் பார்த்திருக்கேன். ஷூட்டிங்கில் நடக்கும் அத்தனை விடயங்களையும் அப்பா சொல்லிப் புலம்புவார். இதன் மூலமாகத் தான் ஒரு இயக்குநருக்கு இவ்வளவு கஷ்டம் இருக்கும் என நான் புரிந்து கொண்டேன்" என விஜய் கூறியதாக செய்யார் பாலு தெரிவித்திருக்கின்றார். 


மேலும் "விஜய்க்கு ஒரு படத்தினுடைய சூட் சரியாக போகாமல் இருந்தால் அவர் மூடே மாறிடும்" எனவும் தெரிவித்துள்ளார் செய்யார் பாலு. அத்தோடு லியோ படம் குறித்துக் கூறுகையில் படக்குழு சென்னைக்கு வந்து விட்டதாகவும், 10நாள் கேப் விட போவதாகவும் கூறியுள்ளார்.


மேலும் ஐதராபாத்தில் ஒரு செட் அமைந்துள்ளதாகவும், அது எந்தளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை என்றும், அதில் அர்ஜுன் கலந்து கொள்ளப் போவதாகவும் கூறுகின்றார். அதுமட்டுமல்லாது இப்படத்தில் கமல் இணைவதற்கான வாய்ப்பு நிறைய இருப்பதாகவும் கூறுகின்றார் செய்யார் பாலு.


Advertisement

Advertisement