• May 19 2024

நான் சும்மா குடும்பத்துடன் சென்னைக்கு வந்திருக்கேன் அவ்ளோதான்- யானை படத்தை பார்த்த ரம்பா என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் கடந்த 1992ம் ஆண்டு அறிமுகமாகிய நடிகை தான் ரம்பா. இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பிரபு நடிப்பில் வெளியாகியிருந்த உழவன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து உள்ளத்தை அள்ளித்தா என்னும் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து செங்கோட்டை, சுந்தர புருஷன், அருணாச்சலம், ராசி, விஐபி, நினைத்தேன் வந்தாய், காதலா காதலா உள்ளிட்ட பல படங்களில் தொடர்ந்து நடித்து இருக்கின்றார். இவ்வாறு பிரபலமான இவர் விஜய் அஜித் அர்ஜுன் பார்த்தீபன் கார்த்திக் போன்ற பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

திருமணத்திற்குப் பிறகு வெளிநாட்டிற்குச் சென்று செட்டிலான இவர் மீனாவின் கணவர் உயிரிழந்த செய்தி கேட்டதுமே மீனா வீட்டுக்கு வந்த ரம்பா கடைசி வரை அவருடனே இருந்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை வெளியான நடிகர் அருண் விஜய்யின் யானை படத்தை தனது குடும்பத்துடன் பார்த்திருக்கின்றார் ரம்பா. மேலும் படத்தைப் பார்த்த இவர் படம் தனக்கும் தனது குழந்தைகளுக்கும் ரொம்பவே பிடித்துள்ளது எனக் கூறியுள்ளார். அத்தோடு இயக்குநர் ஹரி நல்ல எமோஷனலான படத்தை கொடுத்திருக்கிறார். அருண் விஜய் ஆக்‌ஷன் காட்சிகளில் வெறித்தனமாக நடித்திருக்கிறார் என படத்தை வெகுவாக பாராட்டி உள்ளார் ரம்பா.

நடிகை ரம்பாவை பார்த்ததுமே எப்போது நடிக்க வருவீர்கள் என்ற ஒரு கேள்வி தான் அனைத்து ரசிகர்கள் மனதிலும் எழுந்தது. அதை கேட்ட உடனே நான் சும்மா குடும்பத்துடன் சென்னைக்கு வந்திருக்கேன் அவ்ளோதான். வேற எந்த திட்டமும் இப்போதைக்கு இல்லை. இப்போ தமிழ் சினிமா வேறலெவலில் முன்னேறி இருக்கு, உலகம் முழுவதும் கோலிவுட் படம் டிரெண்டாகி வருவது பெருமையாக இருக்கு என பேசி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement