• May 08 2024

கங்கானாவிற்கு எப்படி இது கிடைக்கலாம்.. தென்னிந்திய கலைஞர்களை மத்திய அரசு புறக்கணிக்குதா..? நடிகைகள் ஆதங்கம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

2022 ஆம் ஆண்டைப் பொறுத்தவரையில் தென்னிந்திய சினிமாவில் மட்டுமின்றி உலகளவில் பாக்ஸ் ஆபிசில் சாதனைபுரிந்த ஆண்டாகும். அதாவது இந்திய சினிமாவில், குறிப்பாக தென்னிந்திய சினிமாவின் உலகப் பார்வையை மாற்றியுள்ளது. 

ஆனாலும் ஒரு சில தென்னிந்திய நடிகர்கள் தென்னிந்திய சினிமாவுக்கு இந்திய அரசாங்கத்தால் உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று உணர்வதாக கூறுகின்றார்கள். இந்நிலையில் இது குறித்து நடிகைகள் ஜெயசுதாவும், ஜெயபிரதாவும் தற்போது தங்கள் கவலையை தெரிவித்துள்ளனர். 


அதாவது நடிகை ஜெயசுதா நடிகை ஜெயபிரதாவுடன் சமீபத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் அன்ஸ்டாப்பபிள் என்ற டாக் ஷோவில் கலந்து கொண்டார். அதில் அவர் திரைப்படத் துறையில் தென்னக கலைஞர்களை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என வெளிப்படையாக கூறி உள்ளார். அதில் நடிகை கங்கனா ரனாவத்தை ஒரு உதாரணமாக கூறினார். 

அதாவது "கங்கனா 10 படங்கள் நடிப்பதற்குள் அவருக்கு எவ்வாறு விருது வழங்கபட்டது. இவரை விட பல தசாப்தங்களாக தொழில்துறையில் பணியாற்றிய நடிகர்களுக்கு அவர்களின் பணிக்கான அங்கீகாரம் இன்னமும் வழங்கப்படவில்லை" என கூறினார். 


மேலும் அவர் கூறுகையில் "கங்கனா ரனாவத்துக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்ததில் எனக்கு கவலையில்லை. அவர் ஒரு அற்புதமான நடிகை. இருப்பினும், அவர் 10 படங்கள் நடிப்பதற்குள் அந்த விருதைப் பெற்றார். இங்கு, நாங்கள் பல படங்களில் பணியாற்றியும் இன்னும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை கின்னஸ் சாதனை படைத்த இயக்குனர் விஜய நிர்மலாவுக்கு கூட இதுபோன்ற பாராட்டு கிடைக்கவில்லை" எனத் தெரிவித்திருந்தார்.

இதேபோல் நடிகை ஜெயபிரதா கூறும் போது, நாம் விருதுகளை மரியாதையுடன் பெற வேண்டும். அதைக் கேட்டு வாங்க கூடாது நான் எம்.பி.யாக இருந்தபோது, என்.டி.ஆருக்கு பாரத ரத்னா வழங்கக் கோரிக்கை வைத்தேன். அதை நிறைவேற்ற இன்றுவரை முயற்சி செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறாக தென்னிந்திய நடிகர்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனக் கூறி இரு நடிகைகளும் கோரிக்கை வைத்திருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement