இந்திய சினிமாவில் 20 க்கும் அதிகமான படங்களில் இதுவரை நடித்துள்ள ஆலியா பட், தற்போது பிரம்மாஸ்திரா, ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி, ஹார்ட் ஆஃப் ஸ்டோன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் பிரம்மாஸ்திரம் படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஒரு விசயம் பற்றி பேசி உள்ளார்.அதாவது ஏற்கனவே ஒருவர் ஆடிய அயிட்டம் சாங் ஒன்றில் நீங்கள் ஆட விரும்பினால் எந்த பாடலை தேர்வு செய்வீர்கள் என ஆலியா பட்டிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ஊ சொல்றியா மாமா பாடல். ஆனால் சமந்தாவிற்கு பதில் ஆட வேண்டும் என நான் நினைக்கவில்லை.
சமந்தாவுடன் அந்த பாடலில் ஆட வேண்டும். எனக்கு அல்லு அர்ஜுனுடன் தான் ஆட வேண்டும். அல்லு அர்ஜுன், சமந்தாவிற்கு இடையே அந்த பாடலில் ஆட வேண்டுமென்று ஆசை என்றார். புஷ்பா படத்தில் சமந்தா ஆடி ஊ சொல்றியா மாமா பாடல் அனைவரையும் கவர்ந்தது என்பது இது ஒன்றே போதும்.
அத்தோடு நாட்டில் புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவராக இருக்கும் சமந்தா, ஊ சொல்றியா மாமா பாடல் மூலம் அனைவரையும் வசீகரித்து விட்டார். தற்போது புஷ்பா 2 படத்தில் சமந்தாவிற்கு பதில் பாலிவுட் நடிகை ஒருவர் அயிட்டம் சாங் ஆட போகிறார் என சொல்லப்படுவதால், யார் அந்த நடிகை என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர.
எனினும் சமீபத்தில் இந்தியில் புகழ்பெற்ற டிவி நிகழ்ச்சியான காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கூட சமந்தா, ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடினார். அத்தோடு அக்ஷய் குமாருடன் இணைந்து அதே ரியாக்ஷனுடன் சமந்தா ஆடியும், அவரை அலேக்காக அக்ஷய் தூக்கியதும் உள்ள வீடியோ சோஷியல் மீடியாவில் செம வைரலாகி, டிரெண்டானது.
Listen News!