தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக முத்துராமனின் மகன் தான் கார்த்திக். இவர் தமிழில் இயக்குநர் பாராதிராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார்.இப்படத்தில் நடிகை ராதா கதாநாயகியாக நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து நல்ல நல்ல திரைக்கதை உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்துவந்த கார்த்திக் நவரச நாயகன் என்ற பட்டப்பெயரையும் பெற்றார். தொடர்ந்து வெற்றி நாயகனாக வந்த இவர் இடையில் அரசியலில் ஈடுபட்டதால் சினிமாவில் இருந்த விலகினார்.
பின்பு அனேகன் மற்றும் தானாக சேர்ந்த கூட்டம் போன்ற சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.தொடர்ந்து உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் வீட்டிலிருந்து ஓய்வெடுத்து வருகின்றார். இந்த நிலையில் இவருடைய மகன் கௌதம் கார்த்தி சினிமாவில் கலக்கி வருகின்றார்.
மேலும் கார்த்தி 1988ம் ஆண்டு சோலை குயில் என்ற படத்தில் தன்னுடன் நடித்த ராகினி என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின் 1992ம் ஆண்டு அவரது தங்கை ரதியை இரண்டாவது திருமணம் செய்தார்.
கார்த்திக்கின் முதல் திருமணத்தில் 2 மகன்களும், இரண்டாவது திருமணத்தில் ஒரு மகனும் இருக்கிறார்.தற்பொழுது அவர் முழுக்குடும்பத்துடனும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்
Listen News!