• May 18 2024

முகப்பருக்கள் நிறைந்து... மெலிந்த தோற்றத்தில் ஜெனிலியா... ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

குறும்புத்தனம் நிறைந்த தனது நடிப்பினாலும், அழகினாலும் தமிழ் சினிமாவையே கட்டிப் போட்ட ஒருவரே நடிகை ஜெனிலியா. சிறந்த மாடலாக விளங்கிய இவர் தெலுங்கு, இந்தி மற்றும் தமிழ் மொழி படங்களில் நடித்து சினிமாவில் பிரபலமானார். 

நடிப்பு வாழ்க்கையில் இவரது பயணம் 2003 இல் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றி பெற்ற படமான 'துஜே மேரி கசம்' மூலம் தொடங்கினார்.

அதுமட்டுமல்லாது அதே ஆண்டு 'பாய்ஸ்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார். இவ்வாறு தமிழ் சினிமாவில் கால் பதித்த இவர் 2003-2012 காலகட்டத்தில் பல தெலுங்குப் படங்களில் நடித்து தெலுங்கு சினிமாவிலும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.


இவ்வாறாக பல படங்களில் நடித்து வந்த ஜெனிலியா பல விருதுகளையும் வென்றிருக்கின்றார். அதிலும் குறிப்பாக 2006-ஆம் ஆண்டு 'பொம்மரிலு' என்ற தெலுங்கு காதல் கதைக்களத்தை கொண்ட படத்தில் நடித்ததற்காக ஜெனிலியா தனது முதலாவது பிலிம்பேர் விருதைப் பெற்றார்.

இவ்வாறு சினிமாவில் தனது சாதனையை நிலைநாட்டிய இவர் குடும்ப வாழ்க்கையிலும் கால் பதித்திருக்கின்றார். இவருக்கு 2 மகன்களும் உள்ளனர். திருமணம் ஆகியும் கொஞ்சம் கூட அழகு குறையாமல் இருக்கும் இவர் சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருந்து வருவார்.


அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களினை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருவார். அந்தவகையில் தற்போதும் தன்னுடைய ஒரு சில புகைப்படங்களை பகிர்ந்திருக்கின்றார்.


அதில் அவர் முகத்தில் முகப்பருக்கள் நிறைந்து மிகவும் மெலிந்த தோற்றத்தில் காட்சி அளிக்கின்றார். அதுமட்டுமல்லாது அப்புகைப்படத்திற்கு கீழே 'என்னை பற்றியவை யாவும் இந்த உலகத்தில் தொலைந்து விட்டன' எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.


அதனைப் பார்த்த ரசிகர்கள் "ஏன் இப்படி ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மெலிந்து போகிண்றீர்கள்" என கமெண்டுகளின் மூலமாக கேட்டு வருகின்றனர்

Advertisement

Advertisement