• Apr 27 2024

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரிலிருந்து வெளியேறும் முக்கிய பிரபலம்... காவியாவா..? குமரனா..? இவங்களுக்கு என்ன ஆச்சு... குழப்பத்தில் ரசிகர்கள்...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டீவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் அதிகளவிலான வரவேற்பை பெற்ற தொடர்களில் ஒன்று 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'. இந்த தொடரானது வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில் தற்போது 1000 எபிசோடுகளை நெருங்க உள்ளது.


தமிழில் இந்த சீரியல் பெரியளவில் ஹிட்டடித்த பின்பு தெலுங்கில் ‘வடிநம்மா’ என்ற பெயரிலும், கன்னடத்தில் ‘வரலக்‌ஷ்மி ஸ்டோர்ஸ்’ என்ற பெயரிலும் மொத்தமாக 8 மொழிகளில் ஒளிபரப்பாக தொடங்கியது. 

இந்தத் தொடரானது பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை ஈர்த்ததில் முக்கியமான காரணமாக இருந்தவர்கள் முல்லை – கதிர் ஜோடிதான். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முதலில் முல்லையாக  நடித்த விஜே சித்ரா தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டமையை தொடர்ந்து முல்லை கதாபாத்திரத்தில், ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடித்து வந்த காவியா அறிவுமணி நடிக்கத் தொடங்கினார்.


காவியாவை முதலில் ரசிகர்கள் அவ்வளவாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், போகப்போக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றார். மேலும் கூட்டு குடும்பங்கள் உடைந்து வரும் இந்த நேரத்தில் அண்ணன்-தம்பிகளை வைத்து ஒளிபரப்பாகும் இந்த தொடரானது 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் இன்றுவரை வெற்றிகரமாகவே ஓடிக் கொண்டிருக்கிறது.


அந்தவகையில் இப்போது கதையில் தங்களது சொந்த வீட்டை விற்க முற்படுகிறார்கள் மூர்த்தி குடும்பத்தினர். மேலும் அந்த வீட்டை மீனாவின் அப்பாவிற்கு விற்பார்களா அல்லது என்ன செய்யப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலங்களுடன் எடுத்த புகைப்படத்தை போட்டு மிஸ் யூ ஆல் என ஸ்டோரி ஒன்றினை போட்டிருந்தார் காவியா. இதனால் ரசிகர்கள் காவ்யா வெளியேறுகிறாரா என வருத்தப்பட்டார்கள்.


இதனைத் தொடர்ந்து தற்போது குமரனும் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ஆங்கில பட நடிகர்களை தனக்கு பின்னால் போட்டு காமெடியாக மிஸ் யூ ஆல் என பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் குமரனும் வெளியேறுகிறாரா என ஷாக் ஆகி வருகின்றனர். எனினும் இதில் எது உண்மை என்பதை சற்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement

Advertisement